இன்னும் 10 நாள்தான்; வானத்தில் சைக்கிள் ஓட்டலாம்!

கோவை மாநகராட்சி உக்கடம் பெரிய குளத்தில் ஜிப் லைன் ஜிப் சைக்கிள் ரைடு சோதனை ஓட்டம் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இன்னும் 10 நாள்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

author-image
WebDesk
New Update
Zip line cycling trial

கோவையில் ஜிப் லைன் ஜிப் சைக்கிள் ரைடு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 7 குளங்கள் மற்றும் குளக்கரைகள் புனரமைக்கப்பட்டு பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 
இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  ஒரு பகுதியாக குளத்தின் மேற்கு கரையில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிளிங்” ரைடு சேவை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதன் பணிகள் நிரைவடைந்த நிலையில் இதன் சோதனை ஓட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
ஒரே நேரத்தில் ஜிப் லைனில் மூன்று பேர் தொங்கி செல்லும் வகையிலும், ஜிப் சைக்கிளிலில் மூன்று பேர் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் முழுமையான பாதுகாப்பு அம்சத்துடன் முடிக்கப்பட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செயது கேட்டறிந்தார்.
இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவிலேயே 200 மீட்டர் தொலைவு மற்றும் தண்ணீர் மேல் செல்லும் முதல் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் ரைடு கோவையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Advertisment
Advertisements

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: