22 கிரீச்=17°C.. வெப்பமானிகளாக மாறிய வெட்டுக் கிளிகள்! இயற்கையின் வாழும் தெர்மோமீட்டர்கள்!

வெட்டுக் கிளிகளின் கிரீச்சிடும் ஒலி, இயற்கையின் வானிலை காட்டியாகச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெட்டுக்கிளிகள் குளிர்ந்த வெப்பநிலையை விட, வெப்பமான காலநிலையில் வேகமாக ஒலி எழுப்புகின்றன.

வெட்டுக் கிளிகளின் கிரீச்சிடும் ஒலி, இயற்கையின் வானிலை காட்டியாகச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வெட்டுக்கிளிகள் குளிர்ந்த வெப்பநிலையை விட, வெப்பமான காலநிலையில் வேகமாக ஒலி எழுப்புகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crickets

22 கிரீச் = 17°C?: வெட்டுக் கிளிகள் இயற்கையின் வாழும் வெப்பமானிகளாக மாறியது எப்படி?

வெட்டுக் கிளிகளின் கிரீச்சிடும் ஒலி, இயற்கையின் வானிலை காட்டியாகச் செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ரீகனெக்ட் வித் நேச்சர் (Reconnect With Nature) அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அமெரிக்க விஞ்ஞானி அமோஸ் டால்பியர் (Amos Dolbear) இந்த இயற்கையின் விந்தையை முதன்முதலில் 1897-ம் ஆண்டில் விளக்கினார்.

Advertisment

தனது 'வெப்பமானியாக வெட்டுக்கிளி' (The Cricket as a Thermometer) என்ற ஆய்வுக் கட்டுரையில், வெட்டுக்கிளிகள் ஒலி எழுப்பப் பயன்படுத்தும் தசைகள், குளிர்ச்சியான காலநிலையை விட, வெப்பமான காலநிலையில் மிகவும் எளிதாக இயங்குவதை கவனித்தார். இந்தத் தொடர்பு மிக நம்பகமானதாக இருந்ததால், சுற்றுப்புற வெப்பநிலைக்கும் வெட்டுக் கிளியின் ஒலிக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து சூத்திரத்தை அவரால் உருவாக்க முடிந்தது. இது டால்பியரின் விதி (Dolbear’s Law) என்று பிரபலமாக அறியப்படுகிறது.

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration) கூற்றுப்படி, டால்பியரின் விதி (Dolbear’s law) என்ன சொல்கிறதென்றால், ஃபாரன்ஹீட் வெப்பநிலையானது, 15 வினாடிகளில் வெட்டுக்கிளிகள் எழுப்பும் ஒலிகளின் (chirps) எண்ணிக்கையுடன் 40-ஐக் கூட்டினால் வரும் தொகைக்கு தோராயமாகச் சமமாக இருக்கும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

இதை எளிய கணக்கீடு மூலம் புரிந்துகொள்ளலாம்: நீங்கள் 15 வினாடிகளில் 22 வெட்டுக்கிளி ஒலிகளைக் கணக்கிட்டால், தோராயமாக 62 டிகிரி ஃபாரன்ஹீட் (அல்லது 16.67 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையாக இருக்கும். ஏனெனில், 22+40=62. அதேபோல், நீங்கள் 35 வெட்டுக்கிளி ஒலிகளைக் கணக்கிட்டால், வெப்பநிலை சுமார் 75 டிகிரி ஃபாரன்ஹீட் (அல்லது 23.89 டிகிரி செல்சியஸ்) ஆக இருக்கும். ஏனெனில், 35 + 40 = 75. இந்த எளிய சமன்பாடுகளின் அடிப்படையில், வெட்டுக்கிளிகள் குளிர்ந்த வெப்பநிலையை விட, வெப்பமான காலநிலையில் வேகமாக ஒலி எழுப்புகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

அறிவியல் உண்மை என்ன? 

வெட்டுக்கிளிகள் வெப்பநிலைக்கு ஏற்பத் தங்கள் ஒலி எழுப்பும் வேகத்தை மாற்றிக்கொள்வதற்குக் காரணம், அவை குளிர் இரத்தப் பிராணிகள் (cold-blooded) அல்லது புறவெப்பநிலை உயிரினங்கள் (ectothermic) என்பதே ஆகும். அதாவது, அவற்றின் உடல் வெப்பநிலை அவற்றின் வெளிப்புறச் சூழலின் வெப்பநிலையைப் போன்றே இருக்கும். வெட்டுக்கிளிகள் ஒலி எழுப்புவதற்கு தசைகள் சுருங்க வேண்டும். தசை சுருங்குவதற்குத் தேவையான ரசாயன எதிர்வினையின் வேகம் வெப்பநிலையைப் பொறுத்தே அமையும். வெப்பமான காலநிலையில் தசைகள் வேகமாகச் சுருங்குவதால், அவற்றால் அதிக வேகத்தில் ஒலி எழுப்ப முடிகிறது.

ரீகனெக்ட் வித் நேச்சர் (Reconnect With Nature) வலைத்தளத்தின்படி, விஞ்ஞானி டால்பியர் ஆய்வுகளுக்கு பயன்படுத்திய வெட்டுக்கிளி இனம், "ஸ்னோவி ட்ரீ கிரிக்கெட்" (snowy tree cricket) என்று நம்பப்படுகிறது. இந்த இனம், "தெர்மோமீட்டர் கிரிக்கெட்" (thermometer cricket) என்ற செல்லப் பெயரையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

வெட்டுக்கிளி சார்ந்த கணக்கீடு வெப்பநிலையைக் கண்டறிய பயனுள்ள கருவியாக இருந்தாலும், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தின் (University of Nebraska-Lincoln) கூற்றுப்படி, வெப்பநிலை 55 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் குறைவாகவோ (அ) 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகவோ இருக்கும்போது வெட்டுக்கிளிகள் பொதுவாக ஒலி எழுப்புவதில்லை. மேலும், வெட்டுக்கிளியின் ஒலி எழுப்பும் விகிதம் பசி, வயது, இனப்பெருக்க வெற்றி மற்றும் மற்ற ஆண் வெட்டுக்கிளிகளின் போட்டி போன்ற காரணிகளாலும் பாதிக்கப்படலாம்.

வெட்டுக்கிளிகளின் ஒலியில் இருந்து வெப்பநிலையைப் பற்றிய பயனுள்ள, ஆனால் முற்றிலும் துல்லியமான தகவலை நாம் பெற முடிந்தாலும், அதுதான் இந்த சத்தத்தின் முக்கிய நோக்கம் அல்ல. வெட்டுக்கிளிகள் ஒலி எழுப்புவதற்கான உண்மையான காரணம், ஆண் வெட்டுக்கிளிகள் துணையை ஈர்ப்பதே ஆகும்.

ஒலி எழுப்பும் இந்த செயல்முறை ஸ்ட்ரிட்யுலேஷன் (stridulation) என்றழைக்கப்படுகிறது. வெட்டுக்கிளிகள் தங்கள் தனித்துவமான ஒலியைத் தங்கள் இறக்கைகளை ஒன்றோடு ஒன்று தேய்ப்பதன் மூலம் உருவாக்குகின்றன. அவை ஒலி எழுப்ப விரும்பும்போது, தங்கள் இறக்கைகளை உயர்த்துகின்றன. ஒரு இறக்கையில் உள்ள "ஸ்க்ரேப்பர்" (scraper) எனப்படும் அமைப்பு, மற்றொரு இறக்கையில் உள்ள "ஃபைல்" (file) எனப்படும் அமைப்பின் மீது நகர்கிறது. இந்த இரண்டு கட்டமைப்புகளையும் ஒன்றோடு ஒன்று தேய்க்கும் செயல்பாடு, நீங்கள் ஒரு மெல்லிய பல்லுள்ள சீப்பின் பற்களின் மீது விரலை ஓட்டுவது போன்றது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: