ஆதார் அட்டை விவரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்கு இணையத்தில் இலவசமாக புதுபிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை விரங்களை இலவசமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு புதுபிக்க முடியும். மார்ச் 15 முதல் ஜூன் 14ம் தேதிவரை இந்த சேவை இலவசமாக கிடைக்கும். myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இலவசமாக புதுபித்துகொள்ளலாம் ஆனால் ஆதார் மையத்திற்கு சென்றால் ரூ.50 வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் மின் இணைப்பு எண்ணோடு ஆதாரையும் இணைக்காமல் இருந்தால்,மறக்காமல் அதையும் செய்துவிடுங்கள். கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன்பாக பலரும் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுபித்துகொள்ளலாம்.