கோடைகாலம் நெருங்கும்போது கொளுத்தும் வெயிலால் ஏசியின் பயன்பாடு அதிகரிக்கிறது. ஆனால் ஏசியை வெகு நேரம் பயன்படுத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கும். இது பலருக்கு பெரும் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் இரவு முழுவதும் ஏ.சி ஓடினாலும் குறைவான மின்கட்டணம் வரும்படி பார்த்துக்கொள்ள முடியும். ஏ.சி-ஐ இயக்குவதன் மூலம் மின்சாரத்தை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
இரவில் தூங்கும்போது ஏ.சி-யை அணைக்க பலர் மறந்து விடுகிறார்கள். இதனால், இரவு முழுவதும் தொடர்ந்து மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னையைத் தவிர்க்க, தூங்குவதற்கு முன் ஏ.சி. டைமரை அமைக்கவும். பெரும்பாலான ஏசிகளில் 1, 2, 4 மணிநேர டைமர் அம்சங்கள் உள்ளன. நீங்கள் டைமரை 2-3 மணி நேரம் அமைத்தால், அறை குளிர்ச்சியடையும்போது ஏசி தானாகவே அணைக்கப்படும். இது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, மின்சாரத்தையும் சேமிக்கும்.
ஏ.சி.யுடன் ஃபேன் இயக்குவதால் குளிர்ந்த காற்று அறையின் ஒவ்வொரு மூலையிலும் செல்கிறது. இது வீட்டை விரைவாக குளிர்விக்கிறது மற்றும் குறைந்த அளவிலான ஏசி இயங்கும்போது தூங்க முடியும். இந்த தொழில்நுட்பம் மூலம் 30 முதல் 40% மின்சாரத்தை சேமிக்க முடியும். நிபுணர்களின் கூற்றுப்படி, 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் ஏசியை இயக்குவது சிறந்தது. இது கூடுதல் குளிர்ச்சி எடுக்காது மற்றும் ஏ.சி.யில் அழுத்தம் குறைவாக இருக்கும். பலர் 20-22 டிகிரியில் ஏசியை இயக்குகிறார்கள். இது மின்சார செலவை அதிகரிக்கிறது. சரியான வெப்ப நிலையில் ஏசியை இயக்கினால், வீடு குளிர்ச்சியாக இருக்கும், மின் கட்டணம் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர்.
உங்கள் அறையில் உள்ள காற்று வெளியே கசியும்போது ஏர் கண்டிஷனிங் அமைப்பின் செயல்திறனை கணிசமாக பாதிக்கிறது. எனவே காற்று வெளியேறக்கூடிய கதவு, ஜன்னல்கள் மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்து, காற்று வெளியேறாத படி மூடுங்கள். இப்படி வெளியே இருக்கும் சூடான காற்று உங்கள் அறையின் உள்ளே நுழைவதைத் தடுப்பது மூலமாக குளிர்ந்த காற்று உள்ளே இருந்து வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இது ஏசியின் அழுத்தத்தைக் குறைக்கும்.
நாள் முழுவதும் ஏசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் 2 மணி நேரம் ஓடிய பிறகு 5-7 நிமிடங்கள் நிறுத்து வைப்பது நல்லது. இதனால், ஏசிக்கு அழுத்தம் குறைக்கிறது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.
உங்கள் ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தைத் தொடர்ந்து பராமரிப்பது மூலமாக அது சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏர் பில்டர்களை சுத்தம் செய்வது அல்லது மாற்றுவது போன்றவற்றை முறையாக செய்யுங்கள். மேலும் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என்பதை சரி பார்த்து அவ்வப்போது சரிசெய்து விடுவது நல்லது.
மே மாதத்தில் வெளியே வெப்பநிலை 40 டிகிரி என்றால், அறையின் வெப்பநிலை 30 டிகிரி. இந்த சூழ்நிலையில், ஏசி வெப்பநிலையை 22-24 டிகிரியாக அமைக்க வேண்டும். வீட்டின் வெளிப்புற வெப்பநிலையை விட 8 டிகிரி குறைவான வெப்பநிலையில் ஏசியை இயக்குவதால் போதுமான குளிர்ச்சி மற்றும் மின்சார செலவைக் குறைக்கும்.
அதிக குளிரூட்டும் திறன் கொண்ட ஏசியை நீங்கள் தேர்வு செய்யும் அதே வேளையில், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிக ஸ்டார் ரேட்டிங் ஏசி யூனிட்டிகளை வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிக்கள் அதன் குறைந்த ஆற்றல் பயன்பாட்டுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல சேமிப்பு கிடைக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, ஏசி வெகு நேரம் ஓடினாலும் அதன் மின்கட்டணத்தை கணிசமாக உங்களால் குறைக்க முடியும்.