/indian-express-tamil/media/media_files/qXr5h4K0KQPZmnzxSqPX.jpg)
ஏர்டெல் இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதுபுது ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது குறைந்த விலையில் 45 நாள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இது குறிப்பாக அதிக டேட்டா எதிர்பார்க்காமல், காலிங் வசதிக்கு மட்டும் மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு உதவும்.
அதாவது இவர்கள் டேட்டாவிற்கு வைஃபை போன்றவற்றை பயன்படுத்தினால் இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
ஏர்டெல் ரூ.279 திட்டம்
ஏர்டெல்லின் புதிய ரூ.279 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, 600 எஸ்எம்எஸ் மற்றும் 45 நாள் வேலிடிட்டியில் மொத்தமாக 2ஜி.பி டேட்டாவை பெறலாம். அதோடு ஏர்டெல்லின் மற்ற ஆஃபர்கள் அப்போலோ சர்க்கிள், தேங்க்ஸ் ஆப் பயன்கள் உள்ளிட்டவற்றை பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.