சூரிய மண்டலத்தின் மிகப்பெரியதாய் விளங்கும் ஜுபிடர் (வியாழன்) கோளை ஒரு விண்கோள் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நமது வானியல் வல்லுநர்களுக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், ஈதன் சாப்பல் என்ற வானவியிலாளர் தனது செலஸ்ட்ரான் 8 தொலைநோக்கியின் மூலம் ஜுபிடரின் இடது அடிப்பகுதியில் ஒரு சிறிய வெள்ளை புள்ளி தோன்றி மறைவதை படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டார். இந்த புள்ளி ஆகஸ்ட் 7 அன்று 4:07 UTC ஜுபிடரில் விண்கோளால் ஏற்ப்பட்ட பாதிப்பு என்பதையும் ட்விட்டரில் விவரித்தார்.
இப்படத்தால் மற்ற வானவியிலாளர்களுக்கும் ஜுபிடரை விண்கோள் தாக்கியிருக்கும் என்ற சாத்திய கூறுகளை அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர், 1994-ம் ஆண்டு எஸ்.எல் 9 அல்லது வால்மீன் ஷூமேக்கர்-லெவி 9 என்ற விண்கோள் ஜுபிடரைத் தாக்கியதையே நாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.
அந்த தாக்கத்தை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் பதிவு செய்த டாக்டர் ஹெய்டி பி. ஹம்மல் தனது பாராட்டுகளை ஈதன் சாப்பல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.