New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Meta.jpg)
மெட்டா அதன் உண்மைத் தன்மை சரிபார்ப்பு கொள்கையில் மாற்றங்களை செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்தது.
மெட்டா நிறுவனம் தனது தளத்தில் தகவல்களின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு கொள்கையில் மாற்றம் செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக 72 நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசு காலக்கெடு விதித்துள்ளது.
திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரேசில் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஜார்ஜ் மெசியாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உண்மைத் தன்மை சரிபார்ப்பு கொள்கையில் மாற்றம், குடியேற்றம் மற்றும் பாலின அடையாளம் போன்ற தலைப்புகளில் விவாதங்களைக் குறைத்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"மெட்டா நிறுவனம் மாற்றி கொண்டு வந்துள்ள கொள்கையைப் பற்றி பிரேசில் அரசாங்கத்தின் மகத்தான கவலையை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வழக்கறிஞர் மெசியாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
வியாழனன்று, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, மாற்றங்கள் "மிகவும் தீவிரமானவை" என்று கூறினார், மேலும் தலைப்பைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை அழைத்ததாக அறிவித்தார். இந்நிலையில், இதுகுறித்தான கோரிக்கைக்கு மெட்டா உடனடியாக பதிலளிக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.