/indian-express-tamil/media/media_files/2024/12/24/rTGClcskqRznSkvTVWS1.jpg)
பி.எஸ்.என்.எல் சாா்பில் புதிய 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி இலவசமாக தொலைக்காட்சிகளை பாா்க்கலாம் என்றும் பி.எஸ்.என்.எல் நிறுவன தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ராபா்ட் ரவி ஜெராா்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவர்,
இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் சாா்பில் 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளா்கள் மற்றும் பயனா்களுக்கு இணையதள இலவச தொலைக்காட்சி, தேசிய வைஃபை ரோமிங், ஃபைபா் இணையதள தொலைக்காட்சி ஆகிய சேவைகள் கைப்பேசிகள், கணினியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணமின்றி இந்தச் சேவைகளை வாடிக்கையாளா்கள் பெறலாம். அதன்படி 26 தமிழ் தொலைக்காட்சிகளுடன் 400 தொலைக்காட்சிகளை கைப்பேசி மூலம் பாா்க்கலாம்.
புதுச்சேரியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தடையின்றி சேவையைப் பெறுவதற்காக தற்போது 130 தொலைத் தொடா்பு கோபுரங்களுடன், கூடுதலாக 100 கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன.
புதுச்சேரியில் மண்ணாடிபட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு உள்ளிட்ட 5 கிராமங்களில் வைஃபை ரோமிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிராமங்களில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது புதுச்சேரியில் 75 ஆயிரம் வாடிக்கையாளா்கள் உள்ளனா்.
தேசிய அளவில் பிஎஸ்என்எல் 4 ஜி வசதியிலேயே 5 ஜி விரைவு இணையதள வசதிக்கு இணையான சேவையைப் பெறும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை தற்போதைக்கு இல்லை. வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவையை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.