/tamil-ie/media/media_files/uploads/2017/10/bsnl-750.jpg)
பி.எஸ்.என்.எல் அதன் ரூ.151 திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது. கூடுதலாக 2 நாட்கள் வேலிடிட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த திட்டம் தற்போது 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல் ரூ.151 திட்டம்
BSNL வழங்கும் ரூ.151 திட்டம் டேட்டா வவுச்சராகவே உள்ளது. இதன் பொருள், இந்த திட்டத்தை பயன்படுத்த உங்களிடம் ஆக்டிவ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இருக்க வேண்டும். இது 40ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே 28 நாட்களில் இருந்து, புதிய வேலிடிட்டி 30 நாட்களாகும். இது தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல் பயனர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.
ஆனால் மற்ற பகுதிகளுக்கு, எடுத்துக்காட்டாக, சத்தீஸ்கரில், இந்த திட்டம் இன்னும் 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. டேட்டா தவிர இந்த திட்டத்தில் Zing-க்கு இலவச சந்தா உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.