BSNL Wings internet telephony service : இந்தியாவின் முதல் இண்டெர்நெட் மூலம் போன் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
ஒரு மொபைல் ஆப் மூலமாக இந்தியாவில் இருக்கும் எந்த அலைபேசி எண்ணிற்கும் போன் செய்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். இந்த புதிய தொழில்நுட்பத்தை ஜூலையில் அறிமுகப்படுத்தியிருந்தது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பேச வேண்டும் எனும் பட்சத்தில் ரூ.2000ஐத்தினை கட்டணமாக செலுத்த வேண்டும். அறிமுகம் செய்யப்பட்ட 2 நாட்களில் மட்டும் சுமார் 4000 ஆயிரம் புக்கிங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதில் வீடியோ கால் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தியிருக்கிறது பி.எஸ்.என்.எல். ஆனால் பி.எஸ்.என்.எல் விங் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதிகளை பெற இயலும்.
மேலும் படிக்க : உலகின் முதல் 5ஜி போனை அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டோ
பி.எஸ்.என்.எல் விங்ஸ் என்பது ஒரு இண்டெர்நெட் டெலிபோனி சேவையாகும். இந்த சேவையினை பயன்படுத்தி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களுடன் பேசிக் கொள்ளலாம். இந்த ஆப்பினை பயன்படுத்தி இலவசமாக, இணைய வசதி மூலமாக எந்த ஒரு எண்ணிற்கும் போன் செய்து பேசிக் கொள்ளலாம்.
அழைப்பின் மறுமுனையில் இருப்பவரிடம் இந்த ஆப் இருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அழைப்பவரிடம் நிச்சயம் 3ஜி அல்லது 4ஜி இணைப்புடன் கூடிய நெட்வொர்க் இருக்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல் விங்ஸ் இணைப்பினை மொபைல் நம்பர் கொண்டு வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டினை கொடுத்து இந்த ஆப்பினை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இந்த ஒன்டைம் ரெஜிஸ்ட்ரேசனுக்கு ஆகும் செலவு ரூ. 1099 ஆகும். இதில் இணைந்த பின்பு விங்ஸ் ஆப்பினை டவுன்லோட் செய்து யாருக்கு வேண்டுமானாலும் கால் செய்து கொள்ளலாம்.
ஒரு முறை மட்டும் ரெஜிஸ்ட்ரேசன் கட்டணமாக ரூபாய் 1,099 செலுத்தினால் இந்தியாவில் ஒரு வருடம் இந்த சேவையினை பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க விரும்பினால் 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Bsnl wings internet telephony service free unlimited calls to any number in india heres how