இதுவரை யாரும் செய்தது இல்லை.. நிலவின் தொலை தூரத்தில் விண்கலனை தரையிறக்கிய சீனா

இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தொலை தூரத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறக்கி சீனா வரலாற்று சாதனை செய்துள்ளது.

இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தொலை தூரத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறக்கி சீனா வரலாற்று சாதனை செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
China Moon.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நிலவில் இதுவரை யாரும் ஆய்வு  செய்யாத தொலை தூரப் பகுதியில் சீனா வெற்றிகரமாக விண்கலனை  தரையிறக்கி  வரலாற்று சாதனை செய்துள்ளதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. Chang'e-6 திட்டத்தின் மூலம் நிலவின்  இருண்ட பகுதியில் இருந்து முதல்முறையாக பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிப்பதை சீனா நோக்கமாக கொண்டுள்ளது. 

Advertisment

பலவிதமான கருவிகள் மற்றும் அதன் சொந்த லாஞ்சர் பொருத்தப்பட்ட Chang'e-6  விண்கலம், பெய்ஜிங் நேரப்படி காலை 6:23 மணிக்கு (2223 GMT) நிலவின் தென் துருவத்தில் உள்ள ஐட்கன் பேசின் என்ற பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) தெரிவித்துள்ளது. 

Chang'e-6 விண்கலம் மே 3 அன்று சீனாவின் லாங் மார்ச் 5 ராக்கெட் முலம்  தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நிலவு சுற்றுப்பாதையில் சுற்றி வந்த விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா தெரிவித்துள்ளது. 

Chang'e-6 லேண்டர் 2 கிலோ அளவிலான நிலவு பொருட்கள் (மண் மற்றும் பாறை மாதிரிகளை) சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: