/indian-express-tamil/media/media_files/hMSmu7xvDMRBud1Z0IPR.jpg)
ஐரோப்பிய- ஜப்பானிய பெபிகொலம்போ மிஷன் செப்டம்பர் 5, 2024 அன்று புதன் கிரகத்தின் நான்காவது பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது, இறுதி சுற்றுப்பாதை உயர்த்தி விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கிச் சென்றது.
முக்கியமான சுற்றுப் பாதை உயர்வின் போது அனைத்து அமைப்புகளும் நன்றாக செயல்பட்டதாக மிஷன் கன்ட்ரோலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர், இது புதனின் பள்ளம் கொண்ட மேற்பரப்பில் இருந்து வெறும் 165 கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் கடந்து சென்றது.
பெபிகொலம்போ திட்டத்தின் மூலம் முதல் முறையாக மெர்குரியின் தென் துருவப் படம் பூமிக்கு கிடைத்துள்ளது.
விண்கலத்தின் கண்காணிப்பு கேமராக்களில் ஒன்றால் எடுக்கப்பட்ட ஒரு பிரம்மிப்பூட்டும் படம், தென் துருவத்தின் விவரங்களை தெளிவாக வெளிப்படுத்தியது.
பெபிகொலம்போ புதனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது, வரலாற்று சிறப்புமிக்க இந்த படத்தை எடுத்தது. அதாவது இறுதி சுற்றுப் பாதை உயர்வுக்கு பின் 23 நிமிடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டது.
இந்தத் தகவல் புதன் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், சமீபத்திய உந்துதல் சிக்கல்கள் காரணமாக நவம்பர் 2026-ல் திட்டமிடப்பட்டுள்ள புதன் சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்துவதற்கான பணிகளுக்கு உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.