இனி ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும்; மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு புது வசதி
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தமிழக மின்சார வாரியம் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய வசதி கொண்டு வரப்படுகிறது.
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தமிழக மின்சார வாரியம் புதிய வசதி அறிமுகம் செய்துள்ளது. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய வசதி கொண்டு வரப்படுகிறது.
மின்சாரம் தொடர்பான புகார்கள் அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மின்தடை, கூடுதல் மின்கட்டணம். புதிய மின்சார சேவை உள்பட பல்வேறு சேவைகளை மின்சார வாரியம் வழங்கி வருகிறது.
2/5
இந்த சேவைகள் பெற மற்றும் அதன் மீதான புகார்களுக்கு ஆன்லைனில் தெரிவிக்கும் படி வசதி உள்ளது. மின்சார வாரியத்தின் இணையதளம், செயலி மூலம் புகார், மின் கட்டணம் தெரிவிக்கலாம்.
3/5
இந்நிலையில், அவ்வாறு செய்யும் போது சில நேரங்களில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலத்தை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று புகார் மீது நடவடிக்கை தாமதம் ஏற்படுகிறது. புகார்தார்களும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
Advertisment
4/5
இதை போக்கும் வகையில், தற்போது எஸ்,எம்.எஸ் வசதி கொண்டு வரப்படுகிறது. அதாவது மின்னகத்தில் புகார் செய்யப்பட்டதுமே, உதவிப் பொறியாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது
5/5
புகார் செய்யும் போது மின் இணைப்பு எண், பதிவு செய்த செல்போன் நம்பரை மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும். இதன்பின் அந்த இணைப்புக்குரிய அலுவலக பொறியாளரின் செல்போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பப்படும். அவர் புகார் மீது நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news