/indian-express-tamil/media/media_files/n1QwEQEsrgMEBSnf0DKa.jpg)
பிரேசிலில் X அதன் சட்டப்பூர்வ பிரச்சனைகளை எதிர்கொண்ட பிறகு, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் மைக்ரோ பிளாக்கிங் தளத்தை ஆதரித்தார். இதையடுத்து பிரேசிலின் உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம் மீண்டும் இயங்க அனுமதித்தது.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு X இணங்காததால் உச்ச நீதிமன்றம் பிரேசிலில் X தளத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து பிரேசிலில் X சேவைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக 40 நாட்கள் தடைக்குப் பின் இப்போது மீண்டும் சேவையை தொடங்க உள்ளது.
எலான் மஸ்க்கின் X நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக அறிவித்த நிலையல் சேவை தொடங்கப்படுகிறது.
X is proud to return to Brazil. Giving tens of millions of Brazilians access to our indispensable platform was paramount throughout this entire process. We will continue to defend freedom of speech, within the boundaries of the law, everywhere we operate.
— Global Government Affairs (@GlobalAffairs) October 8, 2024
-------------------
O…
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் X தொடர்பான வழக்கில் எலான் மஸ்க்- உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோர் இடையே காரசார விவாதம் நடந்தது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாக X அறிவித்த நிலையில் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் அதன் சேவை மீண்டும் தொடங்குகிறது. பிரேசிலில் X தளத்தை 20 முதல் 40 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.