ஜெட் விமானங்கள் வானில் பறக்கும்போது வெள்ளை நிற புகை ஏற்படும். ஆனால் இவை உண்மையில் புகை இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. அதுதான் உண்மை. அது புகை கிடையாது. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மையை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விமானங்கள் என்றாலே அனைத்து வயது மக்களுக்கும் பிடிக்கும். விமானத்தில் செல்லவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குழந்தைகளுக்கு பூமியில் இருந்து வானில் பறக்கும் விமானத்தை பார்க்கும்போது பெரியளவில் மகிழ்ச்சி ஏற்படும். இந்நிலையில், வானத்தில் சில விமானங்கள் செல்லும்போது அதன் பின் வெள்ளை நிறத்தில் தோன்றும் புகைப்படலம் எப்படி உருவாகிறது என்று தெரியுமா?
நம்மை ஜெட் விமானம் கடந்து சென்றது என்பதை எளிதாக வெள்ளை புகை போன்ற கோடுகளை வெளிபடுத்தும். இந்த புகைக்கோடுகளை நாம் இவ்வளவு நாள் விமானத்தில் இருந்து வெளிவரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மை இல்லை. விமானத்தில் இருந்து புகை வெளியாவது கிடையாது. ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/15/GC9teO1rZ4p1J0MN1wL2.jpg)
ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளிவருகிறது. இந்த நீராவி வானின் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனித்துளியாக மாறி நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன. பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும்.
/indian-express-tamil/media/post_attachments/tamil/uploads/2023/12/flight-4-2023-12-a9188fa6a83a981cc831d2416dab8d97-136923.jpg?impolicy=website&width=827&height=620)
அதி வேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது. இந்த உறைபனி சிறிது நேரம் அப்படியே காற்றல் நின்றுவிடுகிறது. இதனால், அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும் போது காற்று உள்ள குளிர்ச்சியால் உறைந்து போய் இவ்வாறு காட்சியளிக்கின்றன.