FAU-G Records over 1 Million Pre- Registrations Tamil News : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டான FAU-G, கூகுள் ப்ளே ஸ்டோரில் முன் பதிவு செய்ய அனுமதிக்கும் என்று nCORE கேம்ஸ் கடந்த நவம்பர் 30 அன்று அறிவித்தது. இரண்டு நாட்களுக்குள், முதல் 24 மணி நேரத்தில் இந்தியாவில் ப்ளே ஸ்டோரில் அதிக எண்ணிக்கையிலான முன் பதிவுகள் கொண்ட விளையாட்டாக உருவெடுத்துள்ளது. First Person Shooter (FPS) விளையாட்டு, 1.06 மில்லியன் முன் பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும், வரும் நாட்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் டெவலப்பர்கள் ஒரு ட்வீட்டில் பகிர்ந்து கொண்டனர்.
ஆரம்பத்தில், இந்த விளையாட்டு அக்டோபரில் தொடங்கப்படவிருந்தது. ஆனால் அது தாமதமாகி தசரா நேரத்தில், இந்த விளையாட்டின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. தலைப்பாகை அணிந்த சிப்பாயைக் கொண்ட Galwan Valley Episode காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த முழு விளையாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட வெளியீட்டுத் தேதி குறித்து இன்னும் எந்த விவரமும் இல்லை. ஆனால், இதனைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எல்லை பாதுகாப்புக்குப் பொறுப்பான இந்திய வீரர்களுக்கு இந்த விளையாட்டு ஒரு அஞ்சலி.
ஃபியர்லெஸ் மற்றும் யுனைடெட்டைக் (Fearless and United) குறிக்கும் FAU-G: பிரபலமான FPS விளையாட்டான PUBG-ஐ இந்திய அரசாங்கம் தடைசெய்த பின்னரே இந்த விளையாட்டு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், nCore விளையாட்டுகளின் இணை நிறுவனரும், உடற்பயிற்சி குழுவின் GoQII-ன் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஷால் கொண்டல், PUBG உடன் போட்டியிட முயற்சி செய்ய மாட்டோம் என்று தெளிவுபடுத்தினார்.
FAU-G ஓர் போர் ராயல் விளையாட்டு என்று விளம்பரப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்திய ஆயுதப்படைகளின் வரலாற்றில் முக்கியமான அத்தியாயங்களை உள்ளடக்கும். போர் ராயல் பயன்முறையைப் பின்னர் சேர்க்க வாய்ப்பு உள்ளது.
FAU-G-ன் வெளியீட்டிற்கு முன்னதாக, PUBG மீண்டும் வருவதாக வதந்திகள் வந்துள்ளன. இருப்பினும், அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் நேரலையில் செல்ல முடியாது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில், எல்லையில் அமைதியின்மையை அடுத்து உள்நாட்டுப் பயன்பாடுகளின் கோரிக்கையிலிருந்து FAU-G பயனடைந்துள்ளது.
விளையாட்டின் விளக்கம் : “ஆபத்தான எல்லைப் பிரதேசத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் FAU-G கமாண்டோக்களின் சிறப்புப் பிரிவில் சேர்ந்து, இந்திய மண்ணில் விரோத படையெடுப்பார்களுடன் நீங்கள் ஈடுபடும்போது இந்தியாவின் எதிரிகளுடன் நேருக்கு நேர் மோதவேண்டும். மன்னிக்காத நிலப்பரப்பு மற்றும் பாவம் செய்ய முடியாத எதிரிக்கு எதிராக உயிர்வாழ்வதற்காகப் போராடவேண்டும். அச்சமற்ற மற்றும் ஐக்கிய காவலர்களின் மிகவும் தைரியமான மற்றும் கடினமான பணி”.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"