அனைத்து ஆதார் சேவைகளுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் புதிய 'இ-ஆதார்' ஆஃப் அறிமுகம்!

இந்திய அரசு ஆதார் சேவைகளை எளிதாக்க 'இ-ஆதார் செயலி' என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலி மூலம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்திய அரசு ஆதார் சேவைகளை எளிதாக்க 'இ-ஆதார் செயலி' என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் செயலி மூலம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனிலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

author-image
WebDesk
New Update
E-Aadhaar App

அனைத்து ஆதார் சேவைகளுக்கும் புதிய 'இ-ஆதார்' ஆஃப் அறிமுகம்

ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக்கும் வகையில், மத்திய அரசு 'இ-ஆதார் ஆஃப்' என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், பயனர்கள் ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், தங்கள் ஸ்மார்ட்போனிலேயே ஆதார் சேவைகளைச் செய்ய முடியும்.

‘இ-ஆதார் செயலி’ என்றால் என்ன?

Advertisment

தற்போதுள்ள 'எம்-ஆதார் (mAadhaar)' செயலியைப் போலவே, வரவிருக்கும் 'இ-ஆதார் செயலி'யும் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவமாகச் செயல்படும். இதன் மூலம், உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை மாற்றலாம். மேலும், தேவைப்படும் இடங்களில் உங்கள் ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் பகிரவும் முடியும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்தச் செயலியின் early-access தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகிள்பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. அனைத்து அம்சங்களும் இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை என்றாலும், பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து குறிப்பிட்ட சில சேவைகளை முயற்சி செய்யலாம். முழுமையான ஆஃப் இந்த ஆண்டின் இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ-ஆதார் ஆஃப்-ன் முக்கிய அம்சங்கள்

முகவரி, பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண்ணை பயனர்களே மாற்றிக்கொள்ளும் வசதி. டிஜிட்டல் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும், எங்கும் பகிரலாம். பயனர் தங்கள் கைரேகை அல்லது கருவிழி பதிவுகளைப் புதுப்பிக்க மட்டுமே ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

Advertisment
Advertisements

பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் மின்சாரக் கட்டண ரசீதுகள் போன்ற ஆவணங்களை செயலியே தானாகப் பெற்று சரிபார்க்கும் வசதி உள்ளது. இது சரிபார்ப்பு நடைமுறைகளை எளிதாக்கும்.

'ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்' அறிக்கையின்படி, இந்த செயலி செயற்கை நுண்ணறிவு (AI), முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். ஆதார் சரிபார்ப்பு செயல்முறைகளை வேகப்படுத்தும். இதனால், பல நாட்கள் எடுக்கும் அரசு சேவைகளை சில நிமிடங்களில் முடிக்க முடியும். இந்தச் செயலியின் சோதனைப் பதிப்பு (early-access) கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை பதிவிறக்கம் செய்து, தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து அடிப்படை அம்சங்களை முயற்சி செய்யலாம்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: