இன்றைய கூகுள் டூடுளை கவனித்தீர்களா? யார் அந்த பெண்மனி ? அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியது !

தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
google

google

google : இன்றைய தினம் கூகுள் செல்லும் அனைவரும் முகப்பு பக்கத்தில் இடம்பெறும் கூகுள் டூடுளை கவனிக்க மறந்து விடாதீர்கள். அப்படி இதுவரை கவனித்த அனைவரும் சேலை கட்டிக் கொண்டு கையில் புத்தக்கத்துடன் இருக்கும் அந்த பெண்மணி யார்? என்று யோசித்து இருப்பீர்கள். உங்களுக்கு விடை சொல்லும் செய்தித் தொகுப்பு தான் இது.

Advertisment

காமினி ராய்:

வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி காமினி ராய். இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரியும் ஆவர். 1964ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் பிறந்தார். வசதியும் செல்வாக்கும் நிறைந்த குடும்பம். இவரின் தந்தை நீதிபதியாக இருந்தவர். பெண் கல்வி ஒடுக்கப்பட்ட காலக்கட்டத்திலேயே தன்னுடைய பெண் குழந்தைகளையும் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினார்.

கொல்கத்தாவிலுள்ள பெத்தூன் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, நுழைவுத் தேர்வு மூலம் பெத்தூன் கல்லூரியில் சேர்ந்தார். மூன்றாண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு, சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டம் படித்தார்.1889ல் காமினியின் முதல் கவிதை நூல் வெளியானது. அதேபோல பெண்களின் வாக்குரிமைக்காகவும் போராடினார். 1925ல் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராகவும் காமினி செயலாற்றினார்.

Advertisment
Advertisements

1894ல் கேதார்நாத் ராயைத் திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகளில் கேதார்நாத் மரணம் அடைந்தார். காமினி மிகவும் உடைந்து போனார். அவருடைய கவிதைகளிலும் எழுத்துகளிலும் அது பிரதிபலித்தது.1930ம் ஆண்டு நடைபெற்ற வங்காள இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் பாங்கிய சாகித்ய பரிஷத்தின் துணைத் தலைவராகவும் இவர் இருந்தார். . 50 ஆண்டுகால காமினியின் எழுத்துலக வாழ்க்கை இந்திய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமானது.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் சமசுகிருத இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

சிறு வயதிலேயே இலக்கியத்தில் காமினிக்கு அதிக ஈடுபாடிருந்தது. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். செப்டம்பர் 27, 1933ல் இவர் காலமானார். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆன காமினி ராயின் 155 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுள் இன்று அவரின் புகைப்படம் பொருந்திய சிறப்பு முகப்பு பக்கத்தை வெளியிட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: