/tamil-ie/media/media_files/uploads/2018/12/a46.jpg)
பிளே ஸ்டோரில் இருந்து 22 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 22ஆப்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆப்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நீக்கப்பட்ட ஆப்கள் அனைத்தும் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர ஆப்கள் இடம்பெற்று இருந்தன.
இசெட் (ESET) பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர் பரப்பிய ஆப்கள் குறித்த விவரங்கள் இருந்தன. இந்த செயலிகள் பிளே ஸ்டோரின் டிரெண்டிங் பகுதியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆப்கள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். அதாவது, கேமினை திறந்து விளையாட முற்படும் போது ஆப்கள் கிராஷ் ஆனது. இந்த ஆப்கள் பயனர்களை கேம் சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது. இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.