/tamil-ie/media/media_files/uploads/2022/10/Aadhar-1.jpg)
Aadhar card
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிநது. இந்தநிலையில் தமிழக அரசு அண்மையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கியது. மின்சாரம் முறைகேட்டை தடுக்க மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் பெற ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
கடந்த அக்டோபர் 6-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அந்தவகையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் எம்.டி ராஜேஷ் லகோனி கூறுகையில், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கலாம்.
https://www.tnebltd.gov.in/adharupload/ என்ற அதிகாரப்பூர்வ லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் எண் இணைக்கலாம்.
- முதலில் இந்த லிங்க் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு உங்கள் மின் நுகர்வோர் எண் (service number) பதிவிட வேண்டும்.
- அடுத்து ஆதார் எண் (Aadhaar number) குறிப்பிட வேண்டும்.
- இப்போது, ஆதார் அட்டையை போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அல்லது, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் போது ஆதார் எண்ணை இணைக்கலாம். அதற்கான புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேடியாக இணைப்பது
நேடியாக அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துபவர்கள், அங்குள்ள அலுவலர்களிடம் ஆதார் நகலை சமர்ப்பித்து இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.