ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். வங்கி பரிவர்த்தனை தொடங்கி அனைத்து பயன்பாட்டிற்கும் இப்போது ஆதார் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஜூன் 14, 2023 வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆதார் அட்டையை இலவசமாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. நினைவில் கொள்ளுங்கள், ஆதாரில் திருத்தம் செய்வது என்பது வேறு, ஆதார் புதுப்பித்தல் என்பது வேறு. ஆதாரில் உங்கள் பெயர், புகைப்படம், 10 இலக்க எண், பிறந்த தேதி, முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஏதாவது மாற்றம் செய்வது என்றால் அது திருத்தம் ஆகும். ஆனால் UIDAI-யின் அறிவிப்பு இதற்கானது அல்ல.
அதாவது உங்கள் ஆதார் அட்டை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அதை தற்போதுள்ள சான்றிதழ் படி புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த செயல்முறைகளைத் தான் UIDAI கூறியுள்ளது. இதற்கான நடைமுறையை ஆன்லைனில் செய்தால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. உங்கள் அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆவணங்கள் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் ஆனால் தற்போது இந்த சேவை இலவசமாக ஜூன் 14 வரை வழங்கப்படுகிறது.
ஆன்லைனில் ஆதார் புதுப்பித்தல்
- myaadhaar.uidai.gov.in என்ற இணையதளம் சென்று Aadhaar Self Service Portal பக்கம் செல்ல வேண்டும்.
- அங்கு உங்க ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொடுக்க வேண்டும். இப்போது ஓடிபி வரும். அதை உள்ளிடவும்.
- அடுத்து Document Update க்ளிக் செய்து விவரங்களை சரி பார்க்கவும்.
- இப்போது உங்கள் பெயர் மற்றும் முகவரி சான்றுக்கான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
- அவ்வளவு தான் இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு service request numberஅனுப்பபடும், அதை கொண்டு ஸ்டேட்டஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
அதேசமயம் உங்கள் ஆதாரில் பெயர், பிறந்த தேதி, முகவரி விவரங்கள் தவறாக இருந்தால் ஆதார் புதுப்பித்தல் கூடாது. முதலில் தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும். தவறுகளை திருத்தம் செய்த பிறகே புதுப்பிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“