30 நிமிடங்களில் பெங்களூரு - சென்னை இடையே பயணம்; இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் திட்டம்

ஹைப்பர்லூப் என்பது ஒரு புரட்சிகரமான போக்குவரத்து உயர் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு காப்ஸ்யூல் போன்ற பாட், குறைந்த அழுத்த குழாயின் உள்ளே செலுத்தப்படுகிறது.

ஹைப்பர்லூப் என்பது ஒரு புரட்சிகரமான போக்குவரத்து உயர் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு காப்ஸ்யூல் போன்ற பாட், குறைந்த அழுத்த குழாயின் உள்ளே செலுத்தப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Hyperloop

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் திட்டம், நகரங்கள் இணைப்பில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது. இது விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னையில் நேற்று ஆய்வு செய்தார். இந்த திட்டம் முடிவடைந்த பின்னர், பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான தூரத்தை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும். ஹைப்பர்லூப் என்பது ஒரு புரட்சிகரமான போக்குவரத்து உயர் தொழில்நுட்பமாகும். இதில் ஒரு காப்ஸ்யூல் போன்ற பாட், குறைந்த அழுத்த குழாயின் உள்ளே செலுத்தப்படுகிறது. தண்டவாளங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக, காந்த விசையைப் பயன்படுத்தி, இது செயல்படும் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்த அமைப்பு உராய்வு மற்றும் காற்று எதிர்ப்பை நீக்குகிறது. இது மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தை அடைய அனுமதிக்கிறது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு பெரிய திருப்புமுனையை எதிர்நோக்குகிறது

ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து ஒரு முன்மாதிரியை உருவாக்கி பல மாதங்கள் ஆகிறது. இந்த திட்டத்திற்கு மோடி அரசு முழு ஆதரவை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டம் தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும், ஆனால் எதிர்காலத்தில் இது போக்குவரத்தை மறுவரையறை செய்யும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

எலக்ட்ரானிக்ஸ் துறைக்கான முக்கிய அறிவிப்பு

இந்த நிகழ்வின் போது ஜெட்வொர்க் எலக்ட்ரானிக்ஸ் புதிய உற்பத்தி மையத்தையும் அஷ்வினி வைஷ்னவ் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் பெரியளவில் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்த நிலையில், தற்போது ரூ. 6,000 கோடியை தாண்டியுள்ளது. கூடுதலாக, இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது நாட்டின் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் துறையாக இது இடம்பெறுகிறது. மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பே இந்த சாதனைக்கு காரணம்" எனக் கூறினார்.

Bengaluru Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: