New Update
/indian-express-tamil/media/media_files/DpRkNqw9xteMbN9sei4c.jpg)
இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி கொண்டாடப்படுகிறது.
சந்திரயான்-3 கடந்தாண்டு இதே நாளில் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாறு படைத்தது. இதைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று (ஆக.23) கொண்டாடப்படுகிறது.
2023-ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் முதல் நாடாக தரையிறங்கியது. தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்றது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனையுடன், விண்வெளி ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி புள்ளி என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி ஆண்டுதோறும் கொண்டாடப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.