சந்திரயான்-3 வரலாறு படைத்த தினம்: இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாட்டம்

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி கொண்டாடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Chandrayaan-3

சந்திரயான்-3 கடந்தாண்டு இதே நாளில் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாறு படைத்தது. இதைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று (ஆக.23) கொண்டாடப்படுகிறது. 

Advertisment

2023-ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் முதல் நாடாக தரையிறங்கியது.  தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. தொடர்ந்து நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்றது. 

இந்த குறிப்பிடத்தக்க சாதனையுடன், விண்வெளி ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம் சிவசக்தி புள்ளி என்று அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, இன்று இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் இன்று தொடங்கி ஆண்டுதோறும் கொண்டாடப்பட உள்ளது. 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: