New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/880x495_cmsv2_a1900061-80ff-5bee-8277-91ce20c4c033-3948428.jpg)
India's Space Station, ISRO chief K Sivan, Chandrayaan 2, Gangayaan
கங்காயான் திட்டத்திற்கு பிறகு இஸ்ரோவின் முழு கவனமும் இந்த திட்டத்தில் தான் இருக்கும்
India's Space Station, ISRO chief K Sivan, Chandrayaan 2, Gangayaan
Our own Space Station : சந்திராயன் 2 ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று நேற்று தகவல் அளித்தது இஸ்ரோ. இன்றோ, விண்வெளியில் இந்தியாவுக்கென ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்வெளிக்கு மங்கல்யான் செயற்கைக் கோளை அனுப்பியதிற்கு பிறகு சந்திரயான் 2 மிகப்பெரிய திட்டமாக பார்க்கப்பட்டது. கங்காயான் மற்றும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவது போன்ற மிகப்பெரும் திட்டங்களில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.
விண்வெளித்துறையில் தொடர் சாதனைகளை புரிய வேண்டும் என்றால் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று கே. சிவன் கூறியுள்ளார். அதற்காக பல்வேறு ஏற்பாடுகளை எடுத்து வருகிறது இஸ்ரோ.
வருகின்ற ஜூலை 15ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்படும் செயற்கை கோள் 52 நாட்கள் கழித்து செப்டம்பர் 5 அல்லது 6ம் தேதி நிலவில் தரையிறங்கும். இந்த செயற்கை கோளுடன் 13 செயற்கை கோள்கள் அனுப்பப்படுகின்றன. அவையின் மொத்த எடை 8 யானைகளுக்கு சமமானதாக இருக்கும் என்று கே. சிவன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த மொத்த திட்டத்திற்காக செய்யப்பட்ட செலவானது ரூ.978 கோடியாகும்.
மேலும் படிக்க : ஜூலையில் சந்திராயன் 2… இஸ்ரோவின் புதிய அறிவிப்பு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.