செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா: உலகின் சக்திவாய்ந்த காந்தம் இயக்கம்!

பலமுறை தாமதமாகியுள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு சோதனை உலை (ITER) திட்டம், அணுக்களை மிக அதிக வெப்பநிலையில் ஒன்றோடு ஒன்று மோதுவதன் மூலம் தூய்மையான ஆற்றலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

பலமுறை தாமதமாகியுள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு சோதனை உலை (ITER) திட்டம், அணுக்களை மிக அதிக வெப்பநிலையில் ஒன்றோடு ஒன்று மோதுவதன் மூலம் தூய்மையான ஆற்றலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
powerful magnet comes to life

செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் இந்தியா: உலகின் சக்திவாய்ந்த காந்தம் இயக்கம்!

இந்தியா உட்பட 30 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், உலகளாவிய அணுக்கரு இணைவுத் திட்டத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலகின் மிக சக்திவாய்ந்த காந்தத்தை ஒன்றிணைக்க தயாராக உள்ளனர். இந்த அமைப்பின் கடைசி கூறான மைய சோலனாய்ட் (central solenoid) அமெரிக்கா உருவாக்கி சோதனை முடித்துள்ளது. தற்போது அதன் ஒருங்கிணைப்பு (assembly) பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

பலமுறை தாமதமாகிய சர்வதேச வெப்ப அணுக்கரு சோதனை உலை (ITER) திட்டம், அணுக்களை மிக அதிக வெப்பநிலையில் ஒன்றோடொன்று மோதுவதன் மூலம் தூய்மையான ஆற்றலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ITER

தெற்கு பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவுடன் இயங்கும் ITER, ஆற்றலை வெளியிடும் வகையில் ஒன்றிணைந்து உருகும் அதிவெப்ப பிளாஸ்மா துகள்களை அடைத்து வைப்பதற்கு கண்ணுக்கு தெரியாத காந்த சக்தியை உருவாக்க வேண்டியுள்ளது.  

Advertisment
Advertisements

"இது ஒரு மது பாட்டிலுக்குள் இருக்கும் மற்றொரு பாட்டில் போன்றது. நிச்சயமாக, மது பாட்டிலை விட முக்கியமானது, ஆனால் மதுவை உள்ளே வைக்க உங்களுக்கு பாட்டில் தேவை," என்று ITER இன் பொது இயக்குனர் பியட்ரோ பாரபாஸ்கி கூறினார்.

அணுக்கரு இணைவு என்பது 2 இலகுவான அணுக்கருக்களை, பொதுவாக ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளான டியூட்ரியம் மற்றும் டிரிடியம், ஒரு கனமான கருவாக இணைத்து, அதிக அளவு ஆற்றலை வெளியிடும் செயல்முறையாகும். சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களுக்கு ஆற்றலளிக்கும் அதே செயல்முறை இதுதான்.

ITER டியூட்ரியம் மற்றும் டிரிடியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும். 150 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலைக்கு சூரியனின் மையத்தை விட 10 மடங்கு அதிக வெப்பம் பிளாஸ்மாவை உருவாக்க சூடேற்றப்படுகின்றன.

ITER

சூடான பிளாஸ்மா, டோனட் வடிவ அறையான டோகாமாக்கின் உள்ளே, சக்திவாய்ந்த மீக்கடத்து காந்தங்களைப் பயன்படுத்தி பிடித்து வைக்கப்படுகிறது. இது பிளாஸ்மா சுவர்களைத் தொட்டு குளிர்ச்சி அடைவதைத் தடுக்கிறது.

அணுக்கரு இணைவு வினை: டோகாமாக்கின் உள்ளே, அணுக்கருக்களுக்கு இடையே நிகழும் அதிவேக மோதல்கள் அணுக்கரு இணைவு வினைகளை ஏற்படுத்துகின்றன, இதன் மூலம் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்கள் வெளியிடப்படுகின்றன. இந்த காந்தம் முதலில் 2021-இல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பல தாமதங்களைச் சந்தித்துள்ளது. தற்போது "நெருக்கடி" முடிந்துவிட்டதாகவும், ITER இன் வரலாற்றில் மிக வேகமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாரபாஸ்கி கூறினார். பிளாஸ்மாவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள 2033 இல் திட்டத்தின் தொடக்க கட்டம் ஆரம்பமாகும்.

அணுக்கரு இணைவுக்கான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன, தற்போது டஜன் கணக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பல தனியார் ஸ்டார்ட்-அப்கள் ஒரு தசாப்தத்திற்குள் வணிகரீதியான அணுக்கரு உலைகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளன. இந்தியா 2005-ல் இந்த திட்டத்தில் இணைந்தது மற்றும் அதன் கட்டுமானத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பொருள் வடிவிலான பங்களிப்புகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நிதிப் பங்களிப்புகள் மூலம் இத்திட்டத்திற்கு இந்தியா உதவுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரான்ஸ் பயணத்தை முடிப்பதற்கு முன்பு பிரதமர் மோடி ITER வசதியைப் பார்வையிட்டார். இந்த பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் அவருடன் இருந்தார், மேலும் இரு தலைவர்களும் வசதியின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களை சந்தித்து உரையாடினர்.

Science Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: