/tamil-ie/media/media_files/uploads/2022/10/Instagram-Age-Verification-new.jpg)
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த செயலியாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வயது சரிபார்ப்பு அம்சம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பல்வேறு நாடுகளில் முன்பு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தியா, பிரேசில் நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த வசதி முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அடையாள அட்டை, செல்ஃபி வீடியோ மூலம் வயது சரிபார்ப்பு அம்சத்தை பயன்படுத்த முடியும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காண எளிதாக இருக்கும். பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறுகையில், "இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தனியுரிமை பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஆன்லைன் வயது சரிபார்ப்பு அம்சத்தை யோட்டி ( Yoti) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை, செல்ஃபி வீடியோ பயன்படுத்தி வயது சரிபார்ப்பு அம்சத்தை பயன்படுத்தலாம். செல்ஃபி வீடியோ, அதாவது திரையில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி சரிபார்ப்பு செய்யலாம். பின்னர் அது யோட்டி டிஜிட்டல் ஐடி சேவையுடன் பகிரப்படுகிறது. தகவல்கள் சரிபார்க்கப்பட்டவுடன் அந்த வீடியோ தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா, யோட்டி நிறுவனங்களிடமிருந்து அழிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.