/indian-express-tamil/media/media_files/kIKdIWxZoruNyaRmArjR.jpg)
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பணியான ஆதித்யா எல்.1, பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட் (எல்1) என்ற இலக்கை நெருங்கி வருகிறது. நாளை (ஜனவரி 6) ஆதித்யா எல்.1 விண்கலம் இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
ஜனவரி 6-ம் தேதி பிற்பகல் வாக்கில் இஸ்ரோ இந்த பணியின் மிக முக்கியமான செயலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல்.1 விண்கலம் இறுதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பாதை சூழ்ச்சி இஸ்ரோ இதுவரை செய்யாததாகும்.
இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆதித்யா எல்.1 விண்கலம் ஏற்கனவே எல்.1 புள்ளியை அடைந்து விட்டது. நாளை (ஜனவரி 6) இறுதி சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படும். அதாவது திட்டமிடப்பட்ட புள்ளியில் விண்கலம் நிலைநிறுத்தப்படும். முதல் முயற்சியில் செய்யப்படவில்லை என்றால் விண்கலம் தொடர்ந்து சூரியனை நோக்கி பயணிக்கும். அடுத்தடுத்த முயற்சிகளும் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் முதன்மையான விண்வெளி நிறுவனம், எல்1 புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும், அங்கு ஆதித்யா சூரியனை தடையின்றி பார்க்க முடியும்.
“ஆதித்யா எல்-1 அதை எல்1 புள்ளியைச் சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, ​​L1 புள்ளியும் சேர்ந்து நகரும். எனவே, ஒளிவட்ட சுற்றுப்பாதையும் பூமியுடன் இணைந்து நகரும்” என்று பெங்களூரு இந்திய வானியற்பியல் கழகத்தின் இயக்குனர் அன்னபூர்ணி சுப்ரமணியம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இதுபோன்ற சுற்றுப்பாதை சூழ்ச்சியை இஸ்ரோ செய்வது இதுவே முதன்முறையாகும்.
"இந்த சூழ்ச்சி முக்கியமானது. இது விண்கலத்தின் வேகம் மற்றும் பாதையை மாற்றுவதற்காக உந்துதல்களை இயக்கச் செய்கிறது. முதல் முயற்சியில் உத்தேசித்துள்ள சுற்றுப் பாதை தவறிவிட்டால், அடுத்தடுத்து பல திருத்தங்கள் மற்றும் உந்துதல்கள் தேவைப்படும்,” என்று சூரிய இயற்பியலாளரும், ஆதித்யா எல்1 மிஷனின் விண்வெளி வானிலை மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான திபியேந்து நந்தி கூறினார். ஆதித்யா எல்-1 விண்கலத்தில் மொத்தம் 7 பேலோடுகள் உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/aditya-l1-isro-space-news-9094753/
புதன்கிழமை நிலவரப்படி, ஆதித்யா விண்வெளியில் 124 நாட்களை வெற்றிகரமாக முடித்தது. ASPEX இன் PAPA மற்றும் ஒரு கூறு, சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் உட்பட நான்கு கருவிகள், விண்கலத்தின் பயணக் கட்டத்தில் இயக்கப்பட்டு, அதுவும் தற்போது நன்றாகச் செயல்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.