/indian-express-tamil/media/media_files/ySXnSTpfKs3h4RMwYsOu.jpg)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ். சோம்நாத் நேற்று (சனிக்கிழமை) இன்ஸ்டாகிராமில் உரையாடல் மேற்கொண்டார். #asksomanathisro என்ற பெயரில் விண்வெளி ஆர்வலர்கள், மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சந்திரயானின் அடுத்த திட்டம், சிறுகோள் பயணங்கள் மற்றும் விண்வெளி நிலையங்கள் பற்றி கேள்விகளை எழுப்பினர். அதோடு இஸ்ரோவால் நிலவை ஆய்வு செய்து தண்ணீர் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியுமா?, 10 வயது குழந்தைகளுக்கு நானோ செயற்கைக் கோள் தயாரிக்க இஸ்ரோவால் கற்றுக் கொடுக்க முடியுமா? என்ற கேள்விகளும் வந்தன.
ஒரு மணி நேரம் நீடித்த இந்த உரையாடலில் சோம்நாத் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். நிலவில் நீர் பற்றிய கேள்விகள் மற்றும் 10 வயது குழந்தைகளுக்கான நானோ செயற்கைக் கோள் வகுப்புகள் குறித்தான கேள்விகளின் பதிலுக்கு காத்திருக்க வேண்டும்.
ஏப்ரல் 27 அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த அமர்வில் கிட்டத்தட்ட 1,500 பேர் கலந்து கொண்டனர். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், புவியியலில் கூட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தொழில் செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் சோம்நாத் கேள்விகளைத் தேர்ந்தெடுத்தார், இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கு அப்பால் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை வலியுறுத்தினார்.
மாதிரி திரும்பும் பணிகளில் இஸ்ரோ எவ்வாறு தீவிரமாக செயல்படுகிறது என்பதையும் பற்றி சோமநாத் பேசினார், அங்கு விண்கலங்கள் வான உடல்களிலிருந்து (நிலா அல்லது சிறுகோள்கள் போன்றவை) மாதிரிகளை சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்காக பூமிக்கு கொண்டு வருகின்றன.
நானோ செயற்கைக்கோள்கள் குறித்தும், 100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களுக்கு இணையான திறன் கொண்ட 1 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள செயற்கைக்கோள்களை உருவாக்குவது எப்படி என்பது குறித்தும் விளக்கினார். வெளிக்கோள்கள், விண்வெளி குப்பைகள் மற்றும் சந்திரயான் 4 பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.