ஸ்மார்ட் போன்கள் இன்று நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. காலிங் வசதி, டேட்டா பயன்பாட்டிற்கு என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் சிம் கார்டுகள் வழங்கப்படுகிறது. ஆதார் உள்ளிட்ட அரசின் அடையாள அட்டை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
2/6
அந்த வகையில், 2023-ம் ஆண்டின் இந்திய தொலைத் தொடர்பு சட்டத்தின் படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். இதை மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
3/6
எனினும் ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச சிம் கார்டுகளின் எண்ணிக்கை பிராந்தியத்தைப் பொறுத்தது. நாடு முழுவதும், ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.
இருப்பினும், ஜம்மு & காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளில் (LSAs) இந்த வரம்பு மேலும் குறைந்து 6 சிம் கார்டுகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
Advertisment
4/6
இந்த ஒழுங்குமுறையானது மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். உங்களது பெயரில் உள்ள மொபைல் எண்களை தெரிந்துகொள்வது எப்படி?
5/6
1. அரசின் TAFCOP என்ற இணையதளத்தில் செல்லவும்.
2. இங்கு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா கொடுக்கவும்.
6/6
4. அந்த ஓ.டி.பி எண்ணை கொடுத்த பின் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட எண்கள் காண்பிக்கப்படும். இப்போது சரிபார்த்து தில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news