இந்தியாவில் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை (ஜுன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக எவ்வாறு நடைபெறும் என்று பார்ப்போம்.
1. தேர்தல் நடத்தை விதிகள் 1961 இன் விதி 54 A-ன் கீழ், முதலில் தேர்தல் அதிகாரியின் (RO) மேஜையில் தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணும் பணி தொடங்கப்படும்.
2. தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும்.
3. வாக்குச் சாவடியில் பயன்படுத்த இ.வி.எம்-ன் Control Unit (CU) மட்டுமே வாக்கு எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும். படிவம் 17C உடன் வைத்து இது எண்ணப்படும்.
4. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் CU களின் முடிவைக் கண்டறிவதற்கு முன், வாக்கு எண்ணும் அலுவலர்கள் அவற்றில் உள்ள காகித முத்திரை அப்படியே இருப்பதையும், மொத்த வாக்குகள் படிவம் 17C-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கணக்கிடுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
5. CU களின் வாக்குகளை எண்ணி முடித்த பின்னரே VVPAT சீட்டுகளை எண்ணும் பணி தொடங்கும்.
6. ஒரு சட்டமன்றத் தொகுதி/ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஒவ்வொரு சட்டமன்றப் பிரிவுக்கும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடிகளில் பதிவான VVPAT சீட்டுகள் எண்ணப்படும். இது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் செய்யப்படும்.
7. இப்போது 2 வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் அதிக வாக்குகள் பெற்றால், குலுக்கள் முறையில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“