Advertisment

இதுவரை இல்லாதது; செவ்வாய் கிரகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: விண்கல் காரணமா?

2022-ல் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த செவ்வாய் நிலநடுக்கத்திற்கான மூலக் காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Mars.jpg

An artistic illustration of the InSight Mars lander, which recorded the marsquake. (NASA/JPL-Caltech)

பூமியைப் போலவே, செவ்வாய் கிரகத்திலும்  சில சமயங்களில் தீவிரமான நில நடுக்கம் ஏற்படுகிறது. ஆச்சரியப்படும் வகையில் இது மார்ஸ்குவேக் (Marsquake) செவ்வாய் நிலநடுக்கம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 2022-ல் நிகழ்ந்தது. இறுதியில் இதற்குப் பின்னணியில் உள்ள காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். 

Advertisment

செவ்வாய்கிழமை ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  செவ்வாய்கிழமை ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், செவ்வாய் நடுக்கம் விண்கல் தாக்கத்தால் ஏற்பட்டதற்கான சாத்தியத்தை நிராகரித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக இருந்தது மற்றும் அதன் நில அதிர்வு சமிக்ஞை விண்கற்கள் தாக்கத்தால் ஏற்பட்ட முந்தைய நிலநடுக்கங்களைப் போலவே இருந்ததால், விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் இது தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பினர். 

செவ்வாய் கிரகம் பூமியை விட சிறியது, ஆனால் அது நமது கிரகத்தின் அதே நிலப்பரப்பைச் கொண்டுள்ளது. ஏனெனில் அதில் கடல்கள் இல்லை. சுமார் 144 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த மிகப்பெரிய நிலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. 

அதற்காக, ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், (ESA) சீன தேசிய விண்வெளி நிறுவனம், (CNSA) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் உதவியைக் கோரியது. 

இதுதான் காரணம்

செவ்வாய் கிரகத்தின் மார்ட்டின் மேற்பரப்பின் மீது விஞ்ஞானிகளின் பல மாத விரிவான ஆய்வுக்குப் பிறகு கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தனர். அங்கு பள்ளம் எதுவும் இல்லை என்று அறிவித்தனர். அதனால் விண்கற்களால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தினர்.

மாறாக, செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தில் இருந்து வெளியேறும்  டெக்டோனிக் ஃபோர்ஸ் (tectonic forces) காரணமாக செவ்வாய் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர். இது நாம் புரிந்துகொண்டதை விட செவ்வாய் கிரகம் நில அதிர்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று அர்த்தம். 

எதிர்காலத்தில் மனிதர்களை அனுப்ப முடியுமா? 

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற விண்வெளி ஏஜென்சிகளும், எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்பவியலாளர்களும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தைப் பற்றி பேசியுள்ளனர். 

இது போன்ற ஆய்வுகளின் தகவல்களின் மூலம், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது பாதுகாப்பாக இருக்குமா என்று கேள்வியும், மனிதர்களை அனுப்புவதைத் தவிர்ப்பது நல்லது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/scientists-powerful-marsquake-reason-8988959/

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

 

Nasa Mars
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment