ஜனவரி 18 அன்று ரோட்டார் கிராஃப்ட் விமானத்தின் கடைசிப் பயணத்தின் போது நாசாவின் செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் இன்ஜெனுட்டி அதன் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இன்ஜெனுட்டி உடனான தகவல் தொடர்பை மீண்டும் பெற முடிந்தது என்று நாசா திங்களன்று அறிவித்தது.
இன்ஜெனுட்டி தனது 72-வது விமானப் பயணத்தை செவ்வாய் கிரகத்தில் ஜனவரி 18 அன்று நிறைவு செய்து கொண்டிருந்தது. அப்போது திட்டமிடப்படாத முன்கூட்டியே தரையிறக்கம் செய்த போது தொடர்பு துண்டிக்ககப்பட்டது. ஹெலிகாப்டருக்கும் பூமிக்கும் இடையே ஒரு ரிலேவாக பெர்செவரன்ஸ் ரோவர் செயல்படுகிறது மற்றும் அது தனக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச உயரமான 12 மீட்டர் உயரத்திற்கு ஏறியதைக் குறிக்கும் தரவை திருப்பி அனுப்புகிறது.
ஆனால் அதன் திட்டமிடப்பட்ட பயணத்தின் போது, ஹெலிகாப்டருக்கும் ரோவருக்கும் இடையிலான தொடர்புகள் டச் டவுனுக்கு முன்பே நிறுத்தப்பட்டன. ஆனால் சனிக்கிழமையன்று, விண்வெளி நிறுவனம் இன்ஜெனுட்டி மற்றும் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவருக்கு இடையே மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்தது. ஹெலிகாப்டர் பவர்-பாசிட்டிவ் என்று தீர்மானிக்கப்பட்டது மற்றும் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் Vertical ஆக நிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது, நாசா மேலும் கண்டறியும் சோதனைகளை இயக்க வேண்டும், அதன் பிறகு ஒரு சுழல் சோதனையைத் தொடர்ந்து அதன் மேற்பரப்பைச் சுற்றி புகைப்படங்களை எடுக்க
இன்ஜெனுட்டிக்கு கட்டளையிடும்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/nasa-mars-helicopter-blackout-9123256/
இன்ஜெனுட்டி ரோவர் ஜூலை 30, 2020 அன்று பெர்செவரன்ஸ் ரோவருடன் அனுப்பபட்டது. பிப்ரவரி 18, 2021 அன்று, பெர்சிவரன்ஸ் வெற்றிகரமாக சிவப்பு கிரகத்தில் தரையிறங்கியது. இருப்பினும், ஏப்ரல் 4-ம் தான் ஹெலிகாப்டர் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டது. ரோவர் பொருத்தமான "ஏர்ஃபீல்ட்" இடத்தை அடைந்த பிறகுதான், அது இன்ஜெனியூட்டியை மேற்பரப்பில் தரையிறக்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“