/indian-express-tamil/media/media_files/IhO0SQoTxEXyFRtLY0J3.jpg)
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக, நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஒரு அழகான பெரிய மலையான மவுண்ட் ஷார்ப்பின் அடிவாரத்தில் ஆய்வு செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், நான்கு கால் ரோவர் கிரகத்தைப் பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்தியது. ஆனால் yellow sulfur crystals கண்டறிவது இதுவே முதல் முறையாகும்.
செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவரை அனுப்பியதற்கு கெடிஸ் வாலிஸ் சேனல் முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோவர் மலையில் ஏறத் தொடங்கியதிலிருந்து, காலப்போக்கில் கட்டமைக்கப்பட்ட குப்பை கழிவுகள் பெரிய மேடுகளுக்கு பண்டைய வெள்ள நீர் அல்லது நிலச்சரிவுகள் காரணமா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முயன்றனர்.
சில சமீபத்திய தடயங்கள் இந்த இரண்டு நிகழ்வுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறுகின்றன, சில குவியல்கள் குப்பைகளுடன் சேர்ந்து வன்முறையான நீரின் ஓட்டத்தால் உருவாகின்றன, மற்றவை உள்ளூர் நிலச்சரிவுகளால் ஏற்படுகின்றன என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.