நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை, 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் மாதாந்திர ரீசார்ஜ் பிளான்கள் 28 நாள்கள் மட்டுமே செலுப்படியாகக்கூடியது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ296 திட்டம் - 30 நாள் வேலிடிட்டி
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ரூ296 திட்டமானது, 30 நாள்கள் வேலிடிட்டி காலம் கொண்டது. அதில், வரம்பற்ற அழைப்புகள் மட்டுமின்றி தினமும் 100 மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம். கூடுதலாக, 25 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஒப்பிடுகையில், ஜியோவின் ரூ209 திட்டமானது 28 நாள்கள் செல்லுப்படியாகும். வரம்பற்ற கால் அழைப்பு, டெய்லி 100 மெசேஜ் மட்டுமின்றி தினமும் தலா 1 ஜிபி டேட்டா கிடைக்கிறது. டேட்டா லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் ஸ்பீட் 64kbps அளவில் இருக்கும். இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், 209 திட்டத்தில் தினமும் கிடைக்கும் 1 ஜிபி டேட்டா, அன்றைய தினத்தில் பயன்படுத்த தவறினால் காலாவதியாகிவிடும். ஆனால், 296இல் மொத்தமாக கிடைக்கும் 25 ஜிபி டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் ஒரேடியாக பயன்படுத்தலாம்.
ஏர்டெல் புதிய ரூ.296, ரூ.319 திட்டங்கள் - 30 நாட்கள் வேலிடிட்டி
ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள 296 ரூபாய் ரீசார்ஜ் திட்டம், 30 நாள்கள் செல்லுப்படியாகும். அதில், வரம்பற்ற அழைப்பும், தினமும் 100 மெசேஜ் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதலாக 25 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. டேட்டா தீர்ந்துவிட்டால், பயனர் உபயோகிக்கும் ஒவ்வொரு எம்.பி டேட்டாவுக்கும் 50 பைசா வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஏர்டெல் 319 ரூபாய் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வேலிடிட்டி காலம் 30 நாள்கள் ஆகும். அந்த திட்டத்தின் வரம்பற்ற வாய்ஸ் கால், டெய்லி 100 மெசேஜ், தினமும் 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. டேட்டா தீர்ந்தபிறகு, இன்டர்நெட் ஸ்பீடு 64Kbps அளவிற்கு குறைந்துவிடும்.
வோடபோன் ஐடியா: ரூ.327, ரூ.337 திட்டம்
வோடபோன் ஐடியா 30 நாட்களுக்கு செல்லுப்படியாகும் ரூ.327 பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வரம்பற்ற வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மற்றொரு ரூ337 திட்டமானது 31 நாள்கள் செல்லுப்படியாகிறது. அதில், வரம்பற்ற வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ், 28ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கிறது.
சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், 28 நாள்களுக்குப் பதிலாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்பேரில், தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil