தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதையடுத்து மக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் காட்டினர்.
இந்த விவகாரத்தில் எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர கிளம்பியது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் டிசம்பர் மாதம் முழுவதும் அமைக்கப்படும் என்றார்.
இதையடுத்து, மக்கள் தங்களின் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துவருகின்றனர். இதனால், மின்வாரியத்தின் சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த இணையதளத்திற்கு சென்று நீங்கள் எளிதாக மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்தப் புதிய இணையதள முகவரி https://adhar.tnebltd.org/Aadhaar/ ஆகும்.
இந்தப் புதிய முகவரி இணையதளத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/