ஒன்பிளஸ் 6T அறிமுக விழாவில் மாற்றம் : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய போனை வருகின்ற அக்டோபர் 30ம் தேதி நடத்த இருப்பதாக முன்னதாகவே அறிவித்திருந்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். அதே நாளில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ப்ரோ மற்றும் மேக் அறிமுக விழாவினை நடக்க இருக்கிறது.
அதனால் ஒன்ப்ளஸ் போனின் அறிமுக விழா நியுயார்க் மாகாணத்தில் அமெரிக்க நேரப்படி 11 மணிக்கு நடக்க இருக்கிறது. ஆனால் அக்டோபர் 29ம் தேதி. இந்தியாவில் அறிமுக விழா அக்டோபர் 30ம் தேதி இரவு 8.30 மணிக்கு, டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்திருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் லாவ் “எப்படி ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக விழா எப்படி ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் 6T போனின் அறிமுக விழா எப்படி பாதிக்கப்படும் என மணிக்கணக்கில் யோசித்து ஆலோசனை செய்து இம்முடிவிற்கு வந்தோம் என கூறியிருக்கிறார்.
இந்தியாவில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. அமேசான் இணையத்தில் நீங்கள் ஃப்ரீ புக்கிங் செய்து இந்த போனை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். To read this article in English
ஒன்பிளஸ் 6T சிறப்பம்சங்கள்
இந்த போனைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் ஸ்க்ரீன் அன்லாக். கடந்த முறை வெளிவந்த ஒன்ப்ளஸ் 6ல் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் போனின் பின்பக்கத்தில் இருந்தது.
தற்போது வெளிவர இருக்கும் புதிய போனில் நாம் பார்க்கும் தொடு திரைக்கு அடியில் இந்த போன் இருக்கிறது. இந்த சிறப்பம்சம் தற்போது வெளியாகியுள்ள விவோ மற்றும் ஓப்போ போன்களில் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
6.4 இன்ச் அளவுள்ள ஃபுல் ஹெச்.டி. போனின் திரையானது AMOLEDயால் உருவாக்கப்பட்டது. கொரில்லா க்ளாசில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3700mAh பேட்டரி திறனுடன் வெளிவருகிறது இந்த போன். ஒன்ப்ளஸ் 6ல் வந்த அதே டாஷ்சார்ஜ் டெக்னாலஜி இதிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்க இருக்கும் இந்த போனின் ப்ரோசஸ்ஸர் ஸ்னாப்ட்ராகன் 845 ஆகும். மிட்நைட் ப்ளாக் மற்றும் ட்விலைட் ப்ளாக் நிறங்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.