/indian-express-tamil/media/media_files/so9jFyvaBznjB1Xlb5Fk.jpg)
பெரெக்ரைன் லேண்டர் இன்று ஜனவரி 8, 2024 அன்று கேப் கனாவெரலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து இன்று நிலவை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் விஞ்ஞான பேலோடுகள் மட்டுமல்லாமல், பூமியின் தனித்துவமான பரிசுகளுடனும் அனுப்பபட்டுள்ளது.
பெரெக்ரைன் லேண்டர் சுமார் 20 பேலோடுகளை, மொத்த எடை 90 கிலோ கொண்ட, சந்திர மேற்பரப்பில் வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேலோடுகளில் நாசா 5 கருவிகளை அனுப்பி உள்ளது. இவை அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.
லீனியர் எனர்ஜி டிரான்ஸ்ஃபர் ஸ்பெக்ட்ரோமீட்டர் (LETS), நியர்-இன்ஃப்ராரெட் வோலேடைல் ஸ்பெக்ட்ரோமீட்டர் சிஸ்டம் (NIRVSS), நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர் சிஸ்டம் (NSS) ஆகியவை ஆகும். இதில் NSS, நிலவின் மண்ணில் உள்ள தண்ணீரைக் கண்டறிய அனுப்பபட்டுள்ளது.
பெரெக்ரின் அயன்-ட்ராப் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் (PITMS) மெல்லிய சந்திர வளிமண்டலத்தைப் படிக்கும், அதே நேரத்தில் லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே (LRA) எதிர்கால பயணங்களுக்கு சந்திரனில் ஒரு துல்லியமான இருப்பிடக் குறிப்பானாகச் செயல்படும்.
இருப்பினும், விக்கிபீடியாவின் நகல், பிட்காயின் மற்றும் புகைப்படங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரத்தின் ஒரு துண்டு போன்ற தனிப்பட்ட நினைவுச் சின்னங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும் இந்த பணி கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.