மத்திய அரசு வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் சோலார் பேனல் பொருத்தும் திட்டம் ( பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா) திட்டத்தை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தது.
2/5
அதன்படி, இந்த திட்டத்தில் மானிய விலையில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்கலாம். இலவச மின்சாரத்தை பெறலாம். இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
3/5
1. இதன்படி, https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில், சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நுகர்வோர்கள் பதிவு செய்ய வேண்டும்.
2. பதிவு செய்தவுடன், இணையதளத்தில் உள்ளே சென்று, சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
Advertisment
4/5
3.விண்ணப்பதாரரின் வீட்டில் சோலார் பேனல் நிறுவுவதற்கு சாத்தியமுள்ளது என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் வாயிலாக சோலார் பேனலை அமைத்துக் கொள்ளலாம்.
4.சோலார் பேனல் அமைத்த பின், அது தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
5/5
5.பிறகு மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்த பின் மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news