கோடை காலம், மழைக்காலம், காற்றடி காலம் எனப் பல நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம். இதனால் நமக்கு கோபமும், சலிப்பும் ஏற்படும்.
அதிலும் குறிப்பாக இரவில் கரெண்ட் கட் ஆகிவிட்டால், அவ்வளவு தான். மின்வாரிய ஊழியர்களுக்கு தொடர்பு கொள்வோம். அப்படி இருக்க வீடுகளில் பவர் கட் ஆகிவிட்டால் அதை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும் பணி பற்றி ஒரு ஊழியர் பேசியுள்ளார்.
அதாவது ஒரு வீட்டில் மட்டும் கரெண்ட் கட் ஆகிவிட்டால் அது இன்டிவிஜுவல் ப்யூஸ் ஆப் கால் என்கிறார். அதுவும் மாலை 6 மணிக்கு கரெண்ட் கட் ஆனால் ஊழியர்கள் உடனே வரமாட்டார்களாம். காரணம் அந்த நேரம் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள் போடப்படும். இரவு போக்குவரத்திற்கு வசதியாக போடப்படும்.
அப்போது, உங்கள் ஒரு வீட்டில் பவர் கட் பிரச்சினை என்பதற்காக கரெண்ட் கம்பத்தில் ஏறமுடியாது. காரணம் இப்படி செய்ய அனைத்து லைன்களையும் ஆஃப் செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
மற்ற இடையூருகள் ஏற்படும். இதை தவிர்க்க எப்போதும் நாங்கள் இன்டிவிஜுவல் ப்யூஸ் ஆப் கால் ஆகாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகத் தான் இருப்போம் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.