/tamil-ie/media/media_files/uploads/2023/08/New-Project-42.jpg)
ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரூ.395 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கிட்டதிட்ட வைஃபை பயனர்களுக்கு வசதியாக இருக்கும்.
அதாவது, இது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் குறைந்த ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் குறைந்த விலையில், அதிக வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தை வழங்குகிறது.
ஜியோவின் புதிய ரூ.395 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.395 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 1000 எஸ்.எம்.எஸ், 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு கூடுதலாக 5ஜி டேட்டா, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோ டிவி ஆகியவையும் வழங்குகிறது. ஜியோவின் ரூ.395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மை ஜியோ ஆப்பில் சென்று பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.