மூனா மடிச்சு வச்சுக்கலாம்.. சாம்சங் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன்; வேற லெவல் போன்!

சாம்சங் நிறுவனம் ட்ரை-போல்ட் (Tri-Fold) ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. சாம்சங்கின் இந்தப் புதுமையான முயற்சி, ஸ்மார்ட்போன் உலகில் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் ட்ரை-போல்ட் (Tri-Fold) ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. சாம்சங்கின் இந்தப் புதுமையான முயற்சி, ஸ்மார்ட்போன் உலகில் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
samsung tri-fold phone design

மூனா மடிச்சு வச்சுக்கலாம்.. சாம்சங் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போன்; வேற லெவல் போன்!

சாம்சங் நிறுவனம் ட்ரை-போல்ட் (Tri-Fold) ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. சாம்சங்கின் இந்தப் புதுமையான முயற்சி, ஸ்மார்ட்போன் உலகில் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனம், "Galaxy G Fold" என்றழைக்கப்படலாம் என வதந்திகள் பரவின. சாம்சங் தனது முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது தற்போது உறுதியாகி உள்ளது. அண்மையில் வெளியான One UI 8 பீட்டா கட்டமைப்பில் (build) கண்டறியப்பட்ட புதிய அனிமேஷன்கள், சாம்சங்கின் ட்ரை-போல்ட் போனின் வடிவமைப்பு குறித்த பல சுவாரஸ்யமான விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. 

Advertisment

ஆண்ட்ராய்டு Authority அறிக்கையின்படி, இந்தச் சாதனத்தில் 3 பின்புறப் பேனல்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இடதுபுற பேனலில் போனின் கேமரா அமைந்திருக்கும். இது புகைப்படம் எடுக்கும் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுப் பேனலில் டிஸ்ப்ளேவின் ஒரு பகுதியாகவோ அல்லது ஒரு சிறிய டிஸ்ப்ளேவாகவோ செயல்பட வாய்ப்புள்ளது. வலதுபுற பேனலில் எந்தவித அம்சங்களும் இல்லை. இது டிஸ்ப்ளேவாக இல்லாமல், போனின் பின்புறப் பகுதியாகச் செயல்படக்கூடும் எனத் தெரிகிறது.

Huawei Mate XT Ultimate போன்ற பிற ட்ரை-போல்ட் மாடல்களில் இருந்து சாம்சங் வேறுபடுகிறது. சாம்சங்கின் போன் உள்நோக்கி மடியும் (inward folding) கீல்களைக் (hinges) கொண்டிருக்கும். இது இந்த ஆண்டு மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (Mobile World Congress) சாம்சங் காட்சிப்படுத்திய G-வடிவ முன்மாதிரியை நினைவூட்டுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

இந்தச் சாதனத்தில் 2 வேறுபட்ட அளவிலான கீல்கள் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. இடதுபுறம் உள்ளே மடியும் அதே நேரத்தில், வலதுபுறம் அதன் மேல் பொருந்தும் என்று தெரிகிறது. மேலும், பாதுகாப்பு எச்சரிக்கையும் அனிமேஷன்களில் காணப்படுகிறது. பயனர்கள் வலது பேனலை முதலில் மடக்க வேண்டாம் என சாம்சங் எச்சரிக்கக்கூடும். காரணம், கேமரா தொகுதி சாதனம் முழுமையாக மடிவதைத் தடுத்து, அதைச் சேதப்படுத்தக்கூடும். இது நடைமுறை சவாலையும், அதற்கான சாம்சங்கின் முன்யோசனையையும் காட்டுகிறது.

பிரபல டிப்ஸ்டர் ஜுகன் சோய் (Jukan Choi) தனது எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ள தகவல்படி, சாம்சங் தனது ட்ரை-போல்ட் போன்களின் mass production செப்டம்பர் மாதம் (2025) தொடங்க திட்டமிட்டுள்ளது. இது உறுதியானால், இந்தப் போன் 2025  கடைசி காலாண்டில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, இது பிரீமியம் சாதனம் என்பதில் சந்தேகமில்லை. Huawei Mate XT Ultimate போன்ற ட்ரை-போல்ட் மாடல்கள் போலவே, சாம்சங்கின் இந்தப் போனின் விலையும் $3,000 டாலர்களைக் கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பதால், ஒருசிலரால் மட்டுமே வாங்கக்கூடிய ஆடம்பர சாதனமாக இருக்கலாம்.

தற்போது, இந்த ட்ரை-போல்ட் போனில் என்ன வகையான ஹார்டுவேர் அம்சங்கள் இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சாம்சங் தனது முதல் ட்ரை-போல்ட் போனில் ஒரு சக்திவாய்ந்த செயலி, மேம்பட்ட கேமரா அமைப்பு மற்றும் சிறப்பான பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கலாம். மொபைல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைத் தேடுபவர்களுக்கு, சாம்சங்கின் இந்த ட்ரை-போல்ட் போன் நிச்சயம் ஒரு எதிர்பாராத ஆச்சரியமாக இருக்கும். எதிர்கால ஸ்மார்ட்போன்கள் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டத்தை இது அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: