மின் கழிவுகளுக்கு எதிராக கர்ஜிக்கும் 'சூழல் சிங்கம்'... தூத்துக்குடியின் மின் கழிவு புரட்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் "சூழல் சிங்கம்" என்ற இணையதளத்தை தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் "சூழல் சிங்கம்" என்ற இணையதளத்தை தி.மு.க துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கிவைத்தார்.

author-image
WebDesk
New Update
soolam singam 3

மின் கழிவுகளுக்கு எதிராக கர்ஜிக்கும் 'சூழல் சிங்கம்'... தூத்துக்குடியின் மின் கழிவு புரட்சி!

மின்னணு சாதனங்கள் பெருகிவரும் இன்றைய உலகில், மின் கழிவுகள் (e-waste) சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. தூத்துக்குடியில் உள்ள சில இளம் கண்டுபிடிப்பாளர்கள், இந்த சிக்கலை சிறந்த தீர்வாக மாற்றியுள்ளனர். “சூழல் சிங்கம்” என்ற இந்த முயற்சி, ஒரு வணிகம் மட்டுமல்ல; அது தூய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கான ஒரு கர்ஜனை.

Advertisment

தூத்துக்குடி இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கனிமொழி எம்.பி.யின் முன்னெடுப்பில் "புத்தொழில் களம்" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர் தற்போது "சூழல் சிங்கம்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபடும்.

soolal singam 2

"சூழல் சிங்கம்" ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள முறையில் செயல்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின் கழிவுகளை சேகரித்து, நிறுவனத்தின் இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம். அதன்பின், மின் கழிவுகளை சேகரிக்க பிரத்யேக மின் சரக்கு வாகனம் வீட்டிற்கே வரும்.

Advertisment
Advertisements

இந்தத் திட்டம், ஒரு சுழற்சிப் பொருளாதாரத்திற்கு (Circular Economy) ஒரு முக்கியமான படியாகும். இதன் மூலம், மின்னணு கழிவுகளில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை நிலப்பரப்பில் கொட்டாமல் மறுசுழற்சி செய்ய முடியும். இது சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும். இந்த முயற்சி, முறைசாரா வியாபாரிகளுக்குப் பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு தீர்வை மக்களுக்கு வழங்குகிறது.

இந்த அமைப்பின் தொடக்க விழா தூத்துக்குடி சுப்பையா வித்யாலய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., "சூழல் சிங்கம்" இணையதளத்தை தொடங்கி வைத்து, பள்ளி மாணவிகளிடமிருந்து மின்னணு கழிவுகளைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உலகளாவிய பிரச்சனையாக உள்ளதாகக் கூறினார். நவீன சாதனங்களை குறைந்த காலத்தில் பயன்படுத்தி தூக்கி எறிவதால்தான் மின்னணு கழிவுகள் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்ற விழிப்புணர்வை பள்ளி மாணவிகள் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Soolal singam

நிகழ்ச்சியின் முடிவில், மின்னணு கழிவுகளை சேகரிக்கும் வாகனத்தை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Kanimozhi Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: