/indian-express-tamil/media/media_files/aeJb6cygxGRu2vgJonTD.jpg)
ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் நிலவின் முதல் தனியார் லேண்டர் ‘ஒடிசியஸ்’ மூன் லேண்டர் வெற்றிகரமாக அனுப்பபட்டது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) ஏவப்பட்டது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட Intuitive Machines தனியார் "ஒடிஸியஸ்" மூன் லேண்டரை தயாரித்தது. ராக்கெட்டில் நோவா-சி லேண்டரும் அனுப்பபட்டுள்ளது.
ஒடிஸியஸ் திட்டம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால் நிலவில் கால்பதித்த முதல் தனியார் லேண்டர் என்ற சாதனையைப் பெறும். முன்னதாக 2019-ல் இஸ்ரேலின் பெரேஷீட், 2023-ல் ஜப்பானின் ஹகுடோ, இந்தாண்டில் அமெரிக்காவின் பெரெக்ரின் ஆகிய தனியார் நிறுவனங்கள் நிலவில் தரையிறங்க முயன்றன. ஆனால் அந்த திட்டங்கள் தோல்வியில் முடிந்தன.
நிலவில் இரவு தொடங்கும் வரை லேண்டர் மற்றும் அதன் பேலோடுகள் 7 நாட்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 போலவே நோவா-சி லேண்டரும் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
திட்டம் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் கூறுகையில், ஐ.எம்.1 திட்டம் சந்திர மேற்பரப்பு சூழல் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும், இது மனிதர்களை அனுப்பும் ஸ்டார்ஷிப், நாசாவின் ஆர்ட்டெமிஸ் நிலவு பணிகளுக்கு உதவும் என தெரிவித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் 3 பணிக்கு ஸ்டார்ஷிப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தில் 4 விண்வெளி வீரர்கள் பிளாக் 1 உள்ளமைவுடன் Space Launch System-ல் நிலவு சுற்றுப் பாதைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.