/indian-express-tamil/media/media_files/VhScNl5MggGquuZwR6av.jpg)
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்த படி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அங்கிருந்த படியே தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
சுனிதா மற்றும் புட்ச் இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 5-ம் தேதி சென்றனர். ஒரு வாரத்தில் பூமி திரும்ப இருந்த நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, எஞ்சின் கோளாறு காரணமாக அவர்கள் அங்கேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடுத்தாண்டு பிப்ரவரி 2025 பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய சுனிதா, குடிமக்கள் கடமையை செய்வது மிகவும் முக்கியமானது. இது மிகவும் கூலான விஷயம். விண்வெளியில் இருந்து வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.
விண்வெளியில் இருந்து எப்படி வாக்களிப்பது?
நாசா விண்வெளி வீரர் டேவிட் வுல்ஃப் மிர் விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்களித்த முதல் அமெரிக்கர் ஆவார்.
"தேர்தல் நாளுக்கு முன், ஒரு மறைகுறியாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு JSC-ன் மிஷன் கன்ட்ரோல் மூலம் விண்வெளி வீரர்களுடன் இணைக்கப்படும். ஒவ்வொருவருக்கும் இ-மெயில் மூலம் தனித்தனியாக லாக்கின் அனுப்பபடும் அதைப் பயன்படுத்தி, விண்வெளி வீரர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளை அணுகி, வாக்களிக்கலாம்,
பின்னர் அதை டவுன்லிங்க் செய்து பூமியில் உள்ள கவுண்டி கிளார்க் அலுவலகத்திற்கு அனுப்பபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.