தீங்கிழைக்கும் மென்பொருள் என்றழைக்கப்படும் மால்வேரால் பாதிக்கப்பட்ட டூ-ஃபேக்டர் ஆதன்டிகேஷன் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியது.
டூ-ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் செயலி அக்கவுண்ட்களை ஆன்லைனில் பாதுகாக்க சிறந்த வழியாக கருதப்பட்டு வந்தது. ஆனால், இந்தச் செயலியைப் போன்றே தோற்றமளித்த ஒரு போலிச் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலம் நிதி சார்ந்த தகவல்கள் திருடுபோயின. செயலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பு இதை கண்டறிந்தது.
இந்தச் செயலியை கூகுள் நிறுவனம் அகற்றுவதற்கு முன்பு 10,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்தச் செயலியை யாராவது தங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவியிருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil