Advertisment

டிராய் எடுத்த நடவடிக்கை; வாய்ஸ், எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்த ஜியோ, ஏர்டெல்

ஜியோ, ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன, நீங்கள் டேட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.

author-image
WebDesk
New Update
Airtel jioR.jpg

டிராய்-ன் உத்தரவுக்குப் பிறகு, ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய வாய்ஸ் மட்டும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இப்போது பயனர்கள் தனித்தனியே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். அதாவது வாய்ஸ். எஸ்.எம்.எஸ்களுக்கு ஒரு திட்டமும், இது மூன்றும் உள்ளபடி ஒரு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதிக எண்ணிக்கையிலான பயனர்களுக்கு பயனளிக்கும்.

Advertisment

டிசம்பர் 23, 2024 அன்று அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டது. அதில் வாய்ஸ் மட்டும் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு உத்தரவிட்டது. இதற்காக நிறுவனங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜியோ ரூ.458 மற்றும் ரூ.1,958 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.458 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். இதன் மூலம் அன்லிமிடெட் காலிங் மற்றும் 1,000 இலவச எஸ்.எம்.எஸ் வழங்கப்படும். இதில் மொபைல் டேட்டா வழங்கப்படாது. 

ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி பயன்பாடுகளுக்கான அணுகல் இதனுடன் கிடைக்கும். அதேபோல், ரூ.1,958 திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில், நீங்கள் இலவச அழைப்பு மற்றும் மொத்தம் 3,600 எஸ்எம்எஸ் பெறுவீர்கள். மொபைல் டேட்டா இதில் கொடுக்கப்படாது. 

Advertisment
Advertisement

ஜியோவைப் போலவே, ஏர்டெல் நிறுவனமும் இரண்டு வாய்ஸ் மட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் ரூ.509 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 900 எஸ்எம்எஸ்களை 84 நாட்களுக்கு வழங்குகிறது. அதே நேரத்தில், ரூ.1,999 திட்டத்தில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ்களை ஒரு வருட வேலிடிட்டி உடன் பெறுவார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment