Advertisment

ப்பா இவ்வளவு பெருசா.. பூமியை கடந்து செல்லும் 2 பெரிய சிறுகோள்கள்: பாதிப்பு ஏற்படுமா?

2 பெரிய சிறுகோள்கள் விமானம் அளவு கொண்ட சிறுகோள்கள் நாளை (மார்ச் 27) பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது

author-image
WebDesk
New Update
asteroids.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விமானம் அளவு  கொண்ட 2 பெரிய சிறுகோள்கள் நாளை (மார்ச் 27) பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்ப்பதாக  நாசா தெரிவித்துள்ளது. இப்போது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப் பாதையில் பயணிப்பதாகவும் நாசா கூறியுள்ளது. 

சிறுகோள் 2024 EA3 மற்றும் சிறுகோள் 2024  EO4 ஆகிய 2 சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Advertisment

Asteroid 2024 EA3

பூமியை கடக்கும் முதல் சிறுகோள், பூமியில் இருந்து 3.1 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் கடந்து செல்லும் என்றும், சிறுகோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 38754 கிலோமீட்டர் வேகத்தில் அதன் சுற்றுப் பாதையில் பயணிப்பதாக நாசா கூறுகிறது. சிறுகோள் கிட்டத்தட்ட 150 அடி, தோராயமாக ஒரு பெரிய விமானம் அளவு இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 

இது பூமிக்கு நெருக்கமான சிறுகோள்களின் அப்பல்லோ குழுவிற்கு சொந்தமானது, அவை பூமியைக் கடக்கும் வீட்டுப் பாறைகள் பூமியை விட பெரிய அச்சுகள் கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது. 

Asteroid 2024 EO4

நாளை பூமியை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு சிறுகோள் Asteroid 2024 EO4 ஆகும்.  இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 5.1 மில்லியன் கிலோமீட்டர் தூரம் கடந்து செல்லும். இப்போது ஒரு மணி நேரத்திற்கு 53811 கிலோமீட்டர் வேகத்தில் அதன் சுற்றுப்பாதையில் பயணிக்கிறது. அளவீட்டின் அளவில் சிறுகோள் 2024 EO4, சிறுகோள் 2024 EA3  விட குறைவானது. Asteroid 2024 EO4 120 அடி அளவு கொண்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Asteriods
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment