நிஜ உலகில் இருப்பதுபோல் VFX எப்படி உருவாக்குவது? RRR படத்தில் பணியாற்றிய பீட் டிராப்பர் விளக்கம்

நிஜ உலகில் இருப்பதுபோல விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அதுகுறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் வி.எஃப்.எக்ஸ் குழுவில் பணியாற்றிய பீட் டிராப்பர் கூறினார்.

நிஜ உலகில் இருப்பதுபோல விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அதுகுறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் வி.எஃப்.எக்ஸ் குழுவில் பணியாற்றிய பீட் டிராப்பர் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pete draper

நிஜ உலகில் இருப்பதுபோல் வி.எஃப்.எக்ஸ்... இதுதான் முக்கியம்! VFX கலைஞர் பீட் டிராப்பர் விளக்கம்

ஜே.டி. எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் டிப்ளமோ இன்-டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழா (ஜூன் 23) இன்று, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களில் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய பீட் டிராப்பர் பங்கேற்று உரையாற்றினார். 

Advertisment

2019-ம் ஆண்டு செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் ஸ்கூலின் இயக்குநரான டாக்டர் சாம்ஜித் தனராஜனால் துவங்கப்பட்ட ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனம், அகாடமிக் கல்வி மற்றும் தொழில்துறை இடையேயான இடைவெளியை நீக்கும் நோக்கில் செயல்படும் எதிர்காலத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மீடியா கல்வி நிறுவனமாகும். இதுவரை கோவை நகரில் உள்ள ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனத்தின் 3 மையங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

ஜே.டி. எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனம் தற்போது, பிரான்ஸின் புகழ்பெற்ற டிபிஐம்ஏ  பாரிஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் இன்டர்நேஷனல் டிப்ளமோ இன் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் புதிய பன்னாட்டு டிப்ளமோ பயிற்சியை துவங்கியுள்ளது. இந்நிலையில், கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த டிப்ளமோ பயிற்சிக்கான தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படங்களின் மூத்த வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் பீட் டிராப்பர், இந்த பயிற்சித் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

pete draper 2

Advertisment
Advertisements

இந்நிகழ்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய, பீட் டிராப்பர், தான் பணியாற்றிய திரைப்படங்கள் குறித்த அனுபவங்களை விளக்க படங்களுடன் எடுத்துரைத்தார். மேலும், நிஜ உலகில் இருப்பதுபோல விஷுவல் எபெக்ட்ஸில் உருவாக்க வேண்டும் என்றால், அதுகுறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும். அவற்றை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் ஒருகதை சொல்பவை என்றும் எனவே அதன் வரலாறு பற்றி முழுவதுமாக புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.

மேலும், டி.பி.ஐ.ம்.ஏ. இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜான் பால் சுவாமிநாதன் மற்றும் அவரது குழுவினர் பாரிஸ் நகரத்திலிருந்து நேரலையில் மாணவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். 2 நிலை கொண்ட ஒருவருட தொழில்முனைவு டிப்ளமா பயிற்சி, 8 மாதங்கள் இந்தியாவில் ஆழ்ந்த பயிற்சியும், 2026 பிப்ரவரி மாதத்தில் 1 மாதம் பாரிஸில் முழுநேர வசிப்புடன் கூடிய பயிற்சியும் வழங்குகிறது. மாணவர்களுக்கு உலகளாவிய அனுபவங்களையும் நடைமுறை திறன்களையும் வழங்குகிறது.

இந்த பயிற்சிக்கான பாடத்திட்டத்தில், மீடியா மேலாண்மை, எடிட்டிங், மோஷன் கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன், கலர் கிரேடிங், ஃபினிஷிங் என அனைத்தும், அடோப் பிரீமியர் ப்ரோ, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், போட்டோஷாப், ஆடிஷன், டாவின்சி ரிசால்வ் போன்ற தொழில்துறை கருவிகளுடன் கற்பிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் இணைய 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், யூஜி அல்லது பிஜி முடித்திருந்தால் மேன்மையானது. ஆகஸ்ட் தொடங்கும் இந்த பயிற்சிக்கான விண்ணப்பம் ஜூலை 15-ம் தேதியோடு முடிவடைகிறது. மேலும், 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த டிப்ளமாவை முடித்த பிறகு, டிபிஐம்ஏ பாரிஸ்-இல் யூஜி 2-ம் ஆண்டில் நேரடியாக சேரலாம். யூஜி முடித்த மாணவர்கள், இந்த டிப்ளமாவை முடித்த பிறகு, பிஜி 2-ம் ஆண்டில் சேர வாய்ப்பு உள்ளது.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.எஃப்.எக்ஸ் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவரும் டிஎன்இஜி நிறுவன வி.எஃப்.எக்ஸ் துறைத் தலைவருமான கார்த்திகேயன் கூறுகையில், "இந்த டிப்ளமோ பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நினைப்பதாக கூறினார். டிஜிட்டல் பிலிம்மேக்கிங்-க்கான தேவை தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருவதாகவும் வி.எஃப்.எக்ஸ்-க்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Technology Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: