/tamil-ie/media/media_files/uploads/2023/01/New-Project21.jpg)
இந்தியாவில் 5ஜி சேவை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையைத் தொடங்கி பல்வேறு நகரங்களில் விரிவுபடுத்தி வருகின்றனர். ஜியோ 78 நகரங்களில் தனது 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
வோடபோன்-ஐடியா (Vodafone-idea) நிறுவனம் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று பேண்டுகள் வாங்கி இருந்தும் அக்டோபர் மாதம் தனது 5ஜி சேவையை நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. பயனர்கள் எப்போது 5ஜி சேவை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.நிதி பிரச்சனை காரணமாக 5ஜி சேவை வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 5ஜி சேவையை முதல்முதலாக டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளர் சேவை குழு இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டது. தற்போது ஒரே ஒரு நகரத்தில் மட்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில், Vi பல்வேறு நகரங்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தது. மேலும் 5ஜி ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. டெலிகாம் டாக் நிறுவனமும் இதைத் தெரிவித்தது.
ஜியோ நிறுவனம் 78 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அதேநேரம் ஏர்டெல் 22 நகரங்களில் வழங்கி வருகிறது. ஜியோ இந்தாண்டு இறுதிக்குள் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
எப்படி ஆக்டிவேட் செய்வது?
தங்கள் ஸ்மார்ட்போன்களில் எளிதாக 5ஜி ஆக்டிவேட் செய்யலாம். உங்கள் பகுதியில் 5ஜி கிடைத்தவுடன் உங்கள் மொபைல் நெட்வொர்க் செட்டிங்சில் மாற்ற செய்ய வேண்டும். 5G/4G/3G என நெட்வொர்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம். முன்னதாக உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்கள் பகுதியிலும் 5ஜி சேவை இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.