WhatsApp Desktop மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் செயலி வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியை மொபைல் போன், லேப்டாப், கணினி ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். அந்தவகையில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் அம்சத்தில் புது அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
வாட்ஸ்அப் கொள்கையை மீறும் வகையில் அவதூறு, ஆபாசம் மற்றும் பிறரைப் புண்படுத்தும் வகையில் தகவல் இருந்தால் பயனர்கள் தாங்களாகவே புகார் அளிக்கும் வகையில் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. WhatsApp status report என்று கூறப்படும் அம்சத்தில் பயனர்கள் புகார் அளித்தால், வாட்ஸ்அப் குழு அதை ஆராய்ந்து உண்மைத் தன்மையை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரு பயனர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த அச்சத்தை பெற பயனர்கள் பீட்டா வெர்ஷனில் வாட்ஸ்அப் sign-up செய்து பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/